வைரல் வீடியோ.! மலைப்பாம்பை உயிருடன் பிடித்த பெண்.! குவியும் பாராட்டுக்கள் .!

Default Image
  • கேரளாவில் உயிருடன் இருக்கும் மிகப்பெரிய மலைப்பாம்பை பெண் ஒருவர் பிடிக்கும் வீடியோ இணையத்தில் வைரல் உள்ளது.
  • பாம்பை பிடிக்கும்போது அப்பெண் பாம்பை குழந்தையை என அழைத்ததால் பலர் பாராட்டி உள்ளார்.

கேரளா மாநிலத்தில் உள்ள எர்ணாக்குளத்தில் மூத்த கடற்படை அதிகாரி ஒருவரின் மனைவி வித்யா ராஜு என்பவர் தங்கள் வீட்டின் பின்னல் உள்ள ஒரு மரத்திற்கு கீழே இருந்த சுமார் 20 கிலோ எடை கொண்ட மலைப்பாம்பை தனது குடும்பத்தினருடன் சேர்ந்து பிடித்து உள்ளார்.

வித்யா ராஜு மலைப்பாம்பைபின்  தலைப்பகுதியைப் பிடித்து பையில் போடும் விடீயோவை தற்போது வைரலாகி உள்ளது.இந்த விடியோவை ட்விட்டரில் ஹரிந்தர் சிக்கா என்பவர்  பகிர்ந்துள்ளார்.சுமார் 1.36 நிமிடம் ஓடும் இந்தவீடியோவை பல ஆயிரம் பேர் பார்த்து வித்யா ராஜு  பாராட்டி வருகின்றனர்.

குறிப்பாக இந்த விடீயோவில் வித்யா ராஜு பாம்பை பிடித்து பையில் போடும் போது “பச்சா” என அழைத்து உள்ளார். இதனால் மேலும் பலர் பாராட்டியுள்ளனர்.”பச்சா”  என்பதன் பொருள் குழந்தை என அர்த்தம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்