ஜன்னல் கண்ணாடி உடைப்பு… மன்னிப்பு கேட்ட ரிங்கு சிங்!

Published by
பாலா கலியமூர்த்தி

தென்னைப்பிரிக்கா – இந்தியா இடையேயான 2வது டி20 போட்டி செயின்ட் ஜார்ஜ் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இப்போட்டியில், டிஎல்எஸ் முறைப்படி தென்னாபிரிக்கா அணி 13.5 ஓவரில் 154 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனிடையே, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான நேற்றைய போட்டியில் ரிங்கு சிங் பேட்டிங்கில் இறங்கிய போது இந்திய அணி 55/3 என்ற நிலையில் இருந்தது.

பின்னர் நிதானம் மற்றும் அதிரடியாக விளையாடி 39 பந்துகளில் ஆட்டமிழக்காமல் இரண்டு சிக்ஸர்ஸ் மற்றும் 9 பவுண்டரிகளுடன் 68 ரன்களை விளாசினார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது முதல் அரைசதத்தை ரிங்கு சிங் பதிவு செய்தார். இதில், குறிப்பாக தென்னாப்பிரிக்காவின் கேப்டன் மார்க்ரம் வீசிய 19வது ஓவரில் அடுத்தடுத்து பிரமாண்ட சிக்ஸர்கள் அடித்து விளாசினார்.

பிரமாண்ட சிக்ஸர்… ஜன்னல் கண்ணாடியை உடைத்த இந்திய வீரர் ரிங்கு சிங்!

அப்போது, அந்த பந்து ஸ்டேடியத்தில் இருந்த ஊடக அறையின் மீது விழுந்ததில் அறையின் கண்ணாடி நொறுங்கியது. எனவே, ரிங்கு சிங் அடித்த அந்த சிக்ஸரின் வீடியோ மற்றும் உடைந்த கண்ணாடியின் புகைப்படத்தை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்தனர்.

இந்த நிலையில், நேற்றைய தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் சிக்ஸர் மூலம் ஜன்னல் கண்ணாடி உடைத்ததுக்கு இந்திய இளம் வீரர் ரிங்கு சிங் மன்னிப்பு கேட்டுள்ளார். போட்டிக்குப் பிறகு, தோல்வி மற்றும் போட்டி குறித்து இந்தியர்கள் பேசியுள்ள வீடியோவை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் ரிங்கு சிங்கிடம் ஜன்னல் கண்ணாடி உடைப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர் கூறியதாவது, நான் சிக்ஸ் அடித்த அந்த பந்து, மீடியா ரூம் மீது விழுந்து கண்ணாடி உடைந்தது கூட எனக்கு தெரியாது. மீண்டும் டிரஸ்ஸிங் ரூமுக்கு சென்றபோதுதான் இந்த விஷயம் குறித்து எனக்கு தெரிந்தது. அதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன் என புன்னகையுடன் தெரிவித்தார்.

Recent Posts

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு…இன்று வக்பு வாரிய திருத்த சட்ட மசோதா தாக்கல்!

டெல்லி : இன்று ஏப்ரல் 2, 2025, மற்றும் நாளை (ஏப்ரல் 3, 2025) மக்களவையில் வக்பு வாரிய திருத்த…

12 minutes ago

LSG vs PBKS : சொந்த மண்ணில் வீழ்ந்தது லக்னோ! 17வது ஓவரில் பஞ்சாப் அசத்தல் வெற்றி!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…

8 hours ago

LSG vs PBKS : தட்டுத்தடுமாறி டார்கெட் வைத்த லக்னோ! பஞ்சாப் ஜெயிக்க 172 ரன்கள் தேவை.!

லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…

9 hours ago

LSG vs PBKS : லக்னோவுக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு!

லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…

11 hours ago

வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…

சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…

12 hours ago

“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!

லக்னோ :  தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…

13 hours ago