டென்னிஸ் போட்டியின் மிக பெரிய தொடர்களில் ஒன்றாக கருதப்படும் விம்பிள்டன் கோப்பைக்கான தொடர் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நட்சத்திர வீரர்கள் கலந்து கொண்டு உள்ளார்.
இதில் இன்றைய ஆட்டத்தில் டென்னிஸ் நட்சத்திர வீரர் ரஃபேல் நடால், அமெரிக்க வீரர் டைலர் பிரிட்ஸை கடுமையாக போராடி வீழ்த்தியுள்ளர். இதனை தொடர்ந்து விம்பிள்டன் நிர்வாகம் தனது இணையதள பக்கத்தில் நடால் புகைப்படத்தை பதிவிட்டு, அதில் பாகுபலி என எழுதியுள்ளது.
ரஃபேல் நடால், கடுமையான வயிற்றுவலி பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறார். போட்டிக்கு இடையில் கூட மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டு தான் போட்டியை தொடர்ந்தார்.
இன்னும் சில மருத்துவ சோதனைகள் எடுக்க வேண்டி உள்ளது. அதன் ரிசல்ட் என்ன என்பது எனக்கு தெரியாது. கடந்த ஒரு வாரமாகவே இந்த வயிற்று வலி இருந்து கொண்டு இருக்கிறது. தற்போது போட்டியின் போது தீவிரமடைந்து வருவதாகவும் ரஃபேல் நடால் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அடுத்த போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது அது பற்றி கேட்கப்பட்ட போது , நேர்மையாக சொல்லவேண்டும் என்றால், அப்போதைய சூழ்நிலை எனக்கு தெரியாது. என பதிலளித்தார். இதனை கேள்விப்பட்ட நெட்டிசன்கள், ரஃபேல் நடால் பாகுபலி என்றால் இது தொடக்கமா? முடிவா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பிரிஸ்டல் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த ஒரு நாள் தொடரின் கடைசி போட்டி இன்று…
சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த…
சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…
மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…