ஒலிம்பிக் போட்டி ஒத்தி வைக்கப்படுமா.? ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தகவல்.!

Default Image

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை 3000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். மேலும் 70,000க்கும் மேல் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன் விளைவு காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஒத்தி வைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஜூலை மாதம் 24ம் தேதி தொடங்கி – ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி வரை ஜப்பான் தலைநகரம் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகிறது. இந்த நிலையில் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளதால், போட்டிகள் ஒத்திவைக்கப்படலாம் என தகவல் வெளியாகின. ஆனால் ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் போச் போட்டிகளை ஒத்திவைப்பது குறித்து இதுவரை எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார். இதன்படி பார்த்தால் முடிவு செய்த நாளில் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்டுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்