தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை சமன் செய்யுமா இந்தியா? இன்று 3வது போட்டியில் பலப்பரீட்சை!

Published by
பாலா கலியமூர்த்தி

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் கடந்த 10ம் தேதி நடைபெற்ற முதல் போட்டி மழையால் கை விடப்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் 2வது போட்டி நடைபெற்ற நிலையில், அப்போது இந்திய அணி பேட்டிங் முடிவில் மழை குறுக்கீட்டாதல் இரண்டாவதாக பந்து வீசிய இந்திய அணிக்கு சூழ்நிலைகள் கடும் சவாலாக இருந்தது.

அதனால், டிஎல்எஸ் முறைப்படி தென்னாபிரிக்கா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இந்த ஊழலில் இன்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது (கடைசி) டி20 போட்டியில் இந்திய அணி விளையாட உள்ளது. இப்போட்டி, ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நியூ வாண்டரர்ஸ் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. எனவே, இன்று நடைபெறும் 3து போட்டியில் தென்னாப்பிரிக்கா வென்றால் டி20 தொடரை 2 – 0 என கைப்பற்றி விடும். இந்திய அணி வென்றால் தொடரை சமன் செய்ய முடியும்.

காசாவிற்கு ஆதரவாக வாசகம்.! நாளை உஸ்மான் கவாஜா விளையாட தடையா..?

மூன்றாவது போட்டி நடைபெறும் மைதானம் அதிக ரன் குவிப்புக்கு சாதகமாகவும், மழைக்கு வாய்ப்பு இல்லை எனவும் கூறப்படுகிறது. டாஸ் வெல்லும் அணி சேஸிங்கை தான் தேர்வு செய்யும் என கூறப்படுகிறது. இதுவரை அங்கு நடந்த டி20 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணி 15 முறையும், இரண்டாவதாக பேட்டிங் செய்த அணி 17 முறையும் வென்றுள்ளன. இதனால், டாஸ் ஒரு விஷயமாக பார்க்கப்படாது.

இந்த சூழலில் இந்திய அணியில் ஒருசில மாற்றங்கள் கொண்டுவரலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.அதில் , குறிப்பாக தொடக்க வீரரான சுப்மன் கில்லுக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் மீண்டும் அணியில் இடம் பிடிப்பார் என்று கூறப்படுகிறது. இதுபோன்று, குல்தீப் யாதவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு அவருக்கு பதிலாக டி20 கிரிக்கெட்டில் நம்பர் ஒன் பவுலராக இருக்கும் ரவி பிஷ்னாய் இடம்பெறுவர் என்று தகவல் வெளியாகியுள்ளது..

Recent Posts

பதில் சொல்லுங்க., இல்லைனா வேலையை விட்டு போங்க.., அரசு ஊழியர்களிடம் ‘கறார்’ காட்டும் எலான் மஸ்க்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று எலான் மஸ்கின் தீவிர…

17 minutes ago

தமிழகத்தில் அடுத்தடுத்து பாலியல் பயங்கரம்! 3 வயது குழந்தை முதல்.., குழந்தைக்கு தாய் வரை..,

சென்னை : தமிழகத்தில் சமீபகாலமாக பல்வேறு இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சி…

1 hour ago

LIVE : தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்… 2வது நாளாக தொடரும் மீனவர்கள் போராட்டம் வரை!

சென்னை : முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. 2025-26 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய…

2 hours ago

சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!

நாகர்கர்னூல் : தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை காலை…

3 hours ago

வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!

வங்கதேசம் : வங்காள விரிகுடாவில் இன்று அதிகாலை 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம்…

3 hours ago

சாம்பியன்ஸ் டிராபி: அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா, நியூசிலாந்து! வெளியேறிய பாக், வங்.,அணிகள்.!

துபாய் : வங்கதேச அணிக்கு எதிராக நேற்றைய தினம் நடந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் அரையிறுதி…

4 hours ago