ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்தது ஏன்.?

Published by
செந்தில்குமார்

2024 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) ஏலம் வரும் டிசம்பர் 19ம் தேதி துபாயில் உள்ள கோகோ கோலா அரங்கில் நடைபெறவுள்ள நிலையில், ட்ரேடிங் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது. 2 ஆண்டுகளுக்கு முன்பு விடுவித்த ஹர்திக் பாண்டியாவை மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த பரபரப்பான நேரத்தில் இன்னும் அதிர்ச்சி தரும் விதமாக, 2024ம் ஆண்டுக்கான 17-வது சீசன் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2013 சீசனில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணியை ஐந்து முறை ஐபிஎல் கோப்பையைப் பெறச்செய்த ரோஹித் ஷர்மாவிற்கு பதிலாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளது மும்பை அணியின் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா… எம்.ஐ ஜெர்சியை எரித்து எதிர்ப்பு தெரிவிக்கும் ரசிகர்கள்!

இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் ஷர்மாவுக்குப் பதிலாக ஹர்திக் பாண்டியா இடம்பிடித்ததற்கு என்ன காரணமாக இருக்கும் என்கிற யோசனை அனைவரிடத்திலும் வந்துள்ளது. ஹர்திக் பாண்டியாவை மும்பை அணி வாங்குவதற்கும், அவரை கேப்டனாக நியமிப்பதற்கும் அவருடைய கேப்டன் பதவி ஒரு காரணமாக இருக்கலாம்.

ஏனெனில் அவர் இரண்டு ஆண்டுகள் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த போது, இரண்டு ஐபிஎல் சீசனிலும் அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்றார். இதில் ஒரு சீசனில் சாம்பியன் பட்டத்தையும் வென்றார். தான் கேப்டனாக நியமிக்கப்பட்ட இரண்டு தொடர்களிலும் தனது அணியை இறுதிப்போட்டி வரைக்கொண்டு சென்ற கேப்டன் என்ற பெருமையை ஹர்திக் பாண்டியா பெற்றார்.

உச்சகட்ட விரக்தியில் மும்பை ரசிகர்கள்… ஒரே நாளில் இவ்வளவு லட்சமா?

இது ஒரு காரணமாக கூறப்பட்டாலும், விளையாட்டில் எதுவும் நிரந்தரம் இல்லை என்பது போல ஒவ்வொரு வீரரும் என்றாவது ஒருநாள் ஆட்டத்தை விட்டு விலகுவார்கள். அந்த வகையில் 36 வயதான ரோஹித் ஷர்மாவும் ஐபிஎல் தொடரிலிருந்து ஒய்வு பெறலாம். எனவே மும்பை அணிக்கு ரோஹித் ஷர்மாவிற்கு சமமான ஒரு கேப்டன் வேண்டும் என்ற எண்ணத்தில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

மயோனைஸ் பிரியர்கள் ஷாக்… “ஓராண்டு தடை”! தமிழ்நாடு அரசு உத்தரவு!

சென்னை : பச்சை முட்டை மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படுவது மயோனைஸ். இதனை மக்கள் சிக்கன் சாப்பிடுவதில் இருந்து…

39 minutes ago

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்…தகுந்த பதிலடி அளிக்கப்படும்! ராஜ்நாத் சிங் எச்சரிக்கை!

பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் பிரபல சுற்றுலாத் தலமான பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம்…

1 hour ago

இந்த சீசன் 6 தோல்வி…மன வேதனையில் குமுறிய பாட் கம்மின்ஸ்!

ஹைதராபாத் : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், ஹைதராபாத் அணியும் மோதியது. வழக்கமாக இந்த சீஸனில் இதுவரை…

1 hour ago

பஹல்காம் தாக்குதல் சம்பவம்…பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு எடுத்த முக்கிய முடிவுகள்?

பஹல்காம் : தீவிரவாதத் தாக்குதலையடுத்து, ஏப்ரல் 23 அன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு குறித்து அமைச்சரவைக் குழு…

2 hours ago

SRH vs MI : ஹைதராபாத்தை சம்பவம் செய்த மும்பை இந்தியன்ஸ்! 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் இன்று…

10 hours ago

இது அவுட் இல்ல.., மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக இஷான் கிஷான் ‘சர்ச்சை’ அவுட்!

ஹைதராபாத் :  இன்றைய ஐபிஎல் போட்டியில் (ஏப்ரல் 23) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கு…

11 hours ago