இந்திய, சீன எல்லையில் நடைபெற்ற மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதையடுத்து, சமூக வலைதளங்களில் சீன பொருள்களை தடைசெய்ய வேண்டும் குரல் ஒங்க தொடங்கியது. இதனால், பாதுகாப்பு கருதி டிக் டாக் உள்ளிட்ட சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், 13-வது ஐபிஎல் தொடர் மார்ச் 29-ம் தேதி தொடங்க இருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக ஐபிஎல் போட்டி ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், ஐபிஎல் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகின்ற செப்டம்பர் 19-ம் தேதி முதல் நவம்பர் 10-ம் தேதி வரை பிசிசிஐ நடத்த திட்டமிட்டுள்ளது.
சீனாவை தளமாகக் கொண்ட விவோ ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பை கடந்த 2018 ஆம் ஆண்டு ரூ .2,199 கோடிக்கு ஐந்தாண்டு ஒப்பந்தம் செய்தது. இதனால், இந்த ஐபிஎல் போட்டியில் விவோ ஸ்பான்சர்ஷிப்பை ரத்து செய்யவேண்டும் என பலர் கூறினார்.
சமீபத்தில், ஐபிஎல் நிர்வாக கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், விவோ ஸ்பான்சர்ஷிப்பை தற்காலிகமாக பிசிசிஐ நிறுத்தி வைக்க முடிவு செய்தது. இந்நிலையில், ஐபிஎல்-க்கான புதிய ஸ்பான்சருக்கான டெண்டர் அழைப்பை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ( பிசிசிஐ ) அறிவித்துள்ளது.
பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஆர்வமுள்ளவர்கள் ஏலங்களை சமர்ப்பிப்பதற்கான 13 அம்ச விதிமுறையை அறிவித்தார். மேலும், ஆகஸ்ட் 18 அன்று புதிய டைட்டில் ஸ்பான்சர் யார் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏலம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 14 ஆகும். ஆர்வமுள்ளவர்களின் வருவாய் 300 கோடி ரூபாய்க்கு மேல் இருக்க வேண்டும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதற்கான உரிமைகள் ஆகஸ்ட் 18, 2020 முதல் டிசம்பர் 31, 2020 வரை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…
சென்னை : தனுஷின் 'துள்ளுவதோ இளமை', தாஸ், என்றென்றும் புன்னகை போன்ற பல படங்களிலும், பல முன்னணி விளம்பரங்களிலும் நடித்துள்ள…
சென்னை : காலையில் குறைந்த தங்கத்தின் விலை மதியம் உயர்ந்துள்ளது. காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்த நிலையில் 3…
சென்னை : மும்மொழி கொள்கை விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ள நிலையில், மூன்றாவது மொழி ஏதேனும் என குறிப்பிட்டு மத்திய…
சென்னை : தமிழகத்தில் கோடை காலம் நெருங்கி உள்ள நிலையில் வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் தான் வெயிலின் தாக்கம் அதிகமாக…
சென்னை : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அமெரிக்காவில் இருந்து அவர்கள் சொந்த…