ரிஷப் பண்ட் வாய்ப்பை தவற விடும் போது ரசிகர்கள் தோனியின் பெயரை சொல்லுகிறார்கள்-கோலி ..!

Default Image

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளனர். இதில் முதல் டி20 போட்டி இன்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி தேசிய மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் நேற்று விராட் கோலி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது ரிஷாப் பண்டக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டது.அதற்கு பதில் அளித்த கோலி ,ரிஷாப் பண்ட் யை தொடக்க வீரராக களமிறக்குவது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை.

தற்போது இந்திய அணியில் 3 அல்லது 4 டாப் பேட்ஸ்மான்கள் உள்ளனர்.கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் சஹா சிறப்பாக விளையாடினார். அதனால் அவரை குறுகிய போட்டி விளையாட  நான் கூறினேன் என்றார்.

தொடர்ந்து பேசிய  கோலி ரிஷப் பண்ட் நாங்கள் நம்புகிறோம். ஆனால் அவர் சிறப்பாக விளையாட நம் அனைவரும் அவருக்கு வாய்ப்பு கொடுக்கவேண்டும். ரிஷப் பண்ட் மைதானத்தில் வாய்ப்பை தவற விடுவதும் போதெல்லாம் ரசிகர்கள் தோனியின் பெயரை கத்துகின்றன.

இது சரியான செயல் கிடையாது. எந்த ஒரு வீரரும் இதனை விரும்பமாட்டார்கள். ரிஷப் பண்ட் தவறு செய்தாலும் அவர் நமது நாட்டுக்காக விளையாடுகிறார் என நினைத்து அவருக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 30042025
ramadoss
Punjab won the toss and elected to field
Rajinikanth