இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.இந்நிலையில் இன்று இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பொல்லார்ட் பந்து வீச முடிவு செய்தார். இதை தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் ,மற்றும் கே .எல் ராகுல் இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே இருந்து நிதானமாக விளையாடிய ரோஹித் , கே .எல் ராகுல் இருவரும் அரைசதம் விளாசினார்.
பின்னர் இவர்களின் அதிரடி கூட்டணியில் அணியின் எண்ணிக்கை உயர்ந்தது.சிறப்பாக விளையாடிய ரோஹித் முதலில் சதம் விளாசினார்.பின்னர் அடுத்த சில நிமிடங்களில் கே .எல் ராகுல் சதம் விளாசினார். சதம் அடித்த அடுத்த இரண்டு பந்தில் கே.எல் ராகுல் சிக்ஸர் அடிக்க முயற்சி செய்தபோது ரோஸ்டனிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.
பின்னர் இறங்கிய இந்திய அணியின் கேப்டன் கோலி முதல் பந்திலே ரன் எடுக்காமல் விக்கெட்டை இழந்தார்.இறுதியாக இந்திய அணி 39 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 248 ரன்கள் குவித்தனர்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…
லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…
சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…