கொரோனா விதிமுறைகளை மீறிய வேகப்பந்து வீச்சாளரான ஜோஃப்ராவை நாம் இப்போது ஆதரிக்க வேண்டும் என இங்கிலாந்து அணியின் துணை கேப்டன் பென் ஸ்ட்ரோக்ஸ் தெரிவித்தார்.
இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையே நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் நீக்கப்பட்டார். அதற்க்கு காரணம், அவர் 120 மைல்ஸ் தொலைவில் உள்ள தனது வீட்டிற்கு சென்று வந்ததே ஆகும். இதன்காரணமாக, அவரை 5 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, அந்த 5 நாட்களில் அவருக்கு 2 முறை கொரோனா சோதனை மேற்கொள்ளப்படும் எனவும், அந்த பரிசோதனைகளில் “நெகட்டிவ்” என வந்தால் மட்டுமே ஜோப்ரா ஆர்ச்சர் அடுத்த நடைபெறும் போட்டிகளில் கலந்துகொள்வார் என இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு ஜோப்ரா ஆர்ச்சர் மன்னிப்பு கோரினார்.
இந்நிலையில், “வேகப்பந்து வீச்சாளரான ஜோஃப்ராவை நாம் இப்போது ஆதரிக்க வேண்டும்” என இங்கிலாந்து அணியின் துணை கேப்டன் ஸ்ட்ரோக்ஸ் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், இது அவர் தனியாக இருப்பதைப் போல உணரவில்லை என்பதை உறுதிசெய்கிறதாகவும் தெரிவித்தார்.
கொரோனா தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து, சர்வதேச கிரிக்கெட்டில் முதல் தொடரான இந்த தொடர் ரசிகர்கள் இல்லாமல் மற்றும் கடுமையான சுகாதார நெறிமுறைகளின் கீழ் விளையாடப்படுவதாகவும், ஒரு குழு அவரை விட்டு வெளியேறி ஐந்து அல்லது ஆறு நாட்களில் அவரைப் பார்க்கும்போது இப்போது நாம் செய்யக்கூடிய மோசமான விஷயம் என தெரிவித்தார்.
ஸ்டோக்ஸ் ஆஃப்-ஃபீல்ட் பிரச்சினைகளில் தனது பங்கைக் கொண்டிருந்தார். மேலும் நமது அணிக்காக ஒன்றாக நிற்பது முக்கியம் எனவும் தெரிவித்துள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…