கொரோனா விதிமுறைகளை மீறிய வேகப்பந்து வீச்சாளரான ஜோஃப்ராவை நாம் இப்போது ஆதரிக்க வேண்டும் என இங்கிலாந்து அணியின் துணை கேப்டன் பென் ஸ்ட்ரோக்ஸ் தெரிவித்தார்.
இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையே நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் நீக்கப்பட்டார். அதற்க்கு காரணம், அவர் 120 மைல்ஸ் தொலைவில் உள்ள தனது வீட்டிற்கு சென்று வந்ததே ஆகும். இதன்காரணமாக, அவரை 5 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, அந்த 5 நாட்களில் அவருக்கு 2 முறை கொரோனா சோதனை மேற்கொள்ளப்படும் எனவும், அந்த பரிசோதனைகளில் “நெகட்டிவ்” என வந்தால் மட்டுமே ஜோப்ரா ஆர்ச்சர் அடுத்த நடைபெறும் போட்டிகளில் கலந்துகொள்வார் என இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு ஜோப்ரா ஆர்ச்சர் மன்னிப்பு கோரினார்.
இந்நிலையில், “வேகப்பந்து வீச்சாளரான ஜோஃப்ராவை நாம் இப்போது ஆதரிக்க வேண்டும்” என இங்கிலாந்து அணியின் துணை கேப்டன் ஸ்ட்ரோக்ஸ் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், இது அவர் தனியாக இருப்பதைப் போல உணரவில்லை என்பதை உறுதிசெய்கிறதாகவும் தெரிவித்தார்.
கொரோனா தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து, சர்வதேச கிரிக்கெட்டில் முதல் தொடரான இந்த தொடர் ரசிகர்கள் இல்லாமல் மற்றும் கடுமையான சுகாதார நெறிமுறைகளின் கீழ் விளையாடப்படுவதாகவும், ஒரு குழு அவரை விட்டு வெளியேறி ஐந்து அல்லது ஆறு நாட்களில் அவரைப் பார்க்கும்போது இப்போது நாம் செய்யக்கூடிய மோசமான விஷயம் என தெரிவித்தார்.
ஸ்டோக்ஸ் ஆஃப்-ஃபீல்ட் பிரச்சினைகளில் தனது பங்கைக் கொண்டிருந்தார். மேலும் நமது அணிக்காக ஒன்றாக நிற்பது முக்கியம் எனவும் தெரிவித்துள்ளார்.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…