டோக்கியோ ஒலிம்பிக்கில் பளுதூக்குதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற வீராங்கனை மீராபாய் சானுவுக்கு,வாழ்நாள் முழுவதும் இலவச பீஸ்ஸா வழங்குவதாக டோமினோஸ் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமான தொடக்க நிகழ்ச்சிகளுடன் அதிகாரப்பூா்வமாகத் தொடங்கிய நிலையில்,பல்வேறு தடகள போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி,நேற்று நடைபெற்ற மகளிர் பளுதூக்குதல் 49 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளி பதக்கம் வென்றார்.
ஸ்னாட்ச், கிளீன் மற்றும் ஜெர்க் ஆகிய பிரிவுகளில் (87 கிலோ + 115 கிலோ) மொத்தம் 202 கிலோ எடையை தூக்கி வரலாறு படைத்துள்ளார்.இதனால், டோக்கியோ ஒலிம்பிக் போட்டி தொடரில் இந்தியா வெள்ளியுடன் தனது முதல் பதக்கத்தை பெற்றுள்ளது. இதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக் பதக்க பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
கடந்த 2000 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற கர்னம் மல்லேஸ்வரிக்குப் பிறகு ஒலிம்பிக் பளுதூக்குதலில் பதக்கம் வென்ற இரண்டாவது மற்றும் முதல் வெள்ளி பதக்கம் வென்ற இந்திய பெண் பளுதூக்குபவராக மீராபாய் சானு சாதனை படைத்துள்ளார்.
தலைவர்கள் வாழ்த்து:
பளுதூக்குதலில் இந்தியாவுக்கு முதல் வெள்ளிப் பதக்கம் வென்ற மீரா பாய் சாணுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத்கோவிந்த்,பிரதமர் மோடி,தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
கனவு நனவானது:
இதனையடுத்து,பதக்கம் வென்றது குறித்து மீராபாய் கூறியதாவது: “நிஜமாகவே எனது கனவு நனவானது.இந்த பதக்கத்தை எனது நாட்டுக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன்,இந்த பயணத்தின் போது என்னுடன் இருந்த அனைத்து இந்தியர்களின் லட்சக்கணக்கான பிரார்த்தனைகளுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.அரசு,பயிற்சியாளர் மற்றும் எனது குடும்பத்திற்கு குறிப்பாக எனக்காக நிறைய தியாகங்கள் செய்த மற்றும் என்னை நம்பிய என் அம்மாவுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்”,என்று தெரிவித்தார்.
மேலும்,மீராபாய் சானு என்.டி.டி.வி.க்கு அளித்த பேட்டியில், இந்த வெற்றிக்கு பிறகு,தான் பீஸ்ஸா சாப்பிடுவதை முதலில் செய்ய விரும்பியதாக கூறினார்.இதுகுறித்து அவர் கூறுகையில்,”முதலில், நான் சென்று பீஸ்ஸா சாப்பிடுவேன். நான் அதை சாப்பிட்டு நீண்ட நாட்களாகிவிட்டன. நான் நிறைய சாப்பிடுவேன்”,என்று தெரிவித்தார்.
இந்நிலையில்,டோமினோஸ் இந்தியா தனது பீஸ்ஸாக்களை மீராபாய் சானுவுக்கு வாழ்நாள் முழுவதும் இலவசமாக வழங்க முன்வந்துள்ளது.
மேலும்,இது தொடர்பாக டோமினோஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது,”மீராபாய் சானுவுக்கு வாழ்த்துக்கள்,அவர் மீண்டும் பீஸ்ஸா சாப்பிடக் காத்திருப்பதை நாங்கள் ஒருபோதும் விரும்பவில்லை, எனவே நாங்கள் டோமினோஸ் பீஸ்ஸாவை அவருக்கு வாழ்நாள் முழுவதும் தருகிறோம்”,என்று தெரிவித்துள்ளது.
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…
பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…
சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…