பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து இலங்கை அணி தற்போது ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது. நேற்று நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் பறிகொடுத்து 297 ரன்கள் எடுத்தனர்.இதில் அதிகபட்சமாக இலங்கை அணியின் தொடக்க வீரரான குணதிலக 133 ரன்கள் அடித்தார். பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக முகமது அமீர் 3 விக்கெட்டை பறித்தார்.
இந்நிலையில் இப்போட்டியில் பாகிஸ்தான் வீரர் வஹாப் ரியாஸ் 10 ஓவர் வீசி 81 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை மட்டுமே பறித்தார். இதில் வஹாப் ஒரு ஓவர் கூட மெய்டன் செய்யவில்லை.
இதன் மூலம் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி பந்து வீச்சாளர்கள் 26 முறை 80 ரன்கள் மேல் கொடுத்து உள்ளனர்.இந்த பட்டியலில் பாகிஸ்தான் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. வஹாப் மட்டுமே 6 முறை ஒருநாள் போட்டியில் 80 ரன்கள் மேல் கொடுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை – 46 முறை
பாகிஸ்தான் – 26 முறை *
இங்கிலாந்து – 25 முறை
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…