இந்தியாவில் உள்ளூர் போட்டியான சையத் முஷ்டாக் அலி தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இப்போட்டி இந்தியாவில் பல பகுதிகளில் நடைபெற்று வருகிறது.இந்த தொடரில் 5 பிரிவுகளாக அணிகளை பிரிக்கப்பட்டு விளையாடி வந்தனர். நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் A பிரிவில் இடம் பெற்ற கர்நாடகா அணியும் , D பிரிவில் இடம் பெற்ற ஹரியானா அணியும் மோதியது.
இதில் டாஸ் வென்ற கர்நாடகா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதை தொடர்ந்து முதலில் ஹரியானாஅணி பேட்டிங் செய்தது. ஆட்டம் தொடக்கத்தில் நிதானமாக விளையாடிய ஹரியானா பின்னர் விக்கெட்டை வரிசையை கொடுத்தது.
இதனால் ஹரியானா 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 194 ரன்கள் எடுத்தது. 195 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய கர்நாடக அணியின் தொடக்க வீரராக கே .எல் ராகுல் ,தேவதூத் பாடிக்கல் இருவரும் அதிரடியான ஆட்டத்தால் அணியின் எண்ணிக்கை உயர்ந்தது.
இறுதியாக கர்நாடக அணி 15 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 195 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் நாளை மறுநாள் நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் தமிழக அணியுடன் , கர்நாடக அணி மோத உள்ளது.
இப்போட்டியில் ஹரியானா அணி விளையாடும் போது 19 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே பறிகொடுத்து இருந்தது. பின்னர் கர்நாடகா அணியின் அபிமன்யு மிதுன் கடைசி ஓவரை வீசினார்.
கடைசி ஓவரில் மட்டும் அபிமன்யு மிதுன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் டி20 போட்டியில் ஒரே ஒரு 5 விக்கெட் வீழ்த்தி வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். மேலும் இவர் ராஞ்சி, சையத் முஷ்டாக் அலி, விஜய் ஹாசரே ஆகிய 3 உள்ளூர் தொடர்களிலும் ஹட்ரிக் விக்கெட் எடுத்த வீரர் என்ற சாதனை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…
சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…
சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…
சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…