கண்ணீருடன் பிரியாவிடை கொடுத்த வீராங்கனை-சுவராஸ்சியமான நெகிழ்ச்சி

- கண்ணீருடன் டென்னிஸ் விளையாட்டுக்கு விடை
- டென்மார்க் நாட்டைச் சேர்ந்த வீராங்கனை வோஸ்னியாக்கி ஓய்வு
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் பெண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது ஆட்டம் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது.அந்த ஆட்டம் ஒன்றில் டென்மார்க் வீராங்கனையான வோஸ்னாக்கி எதிர்பாராத விதமாக தோல்வி அடைந்தார். அவரை எதிர்கொண்டு விளையாடிய துனிசியாவின் ஒன்ஸ் ஜாபூர் என்பவர் வோஸ்னியாக்கியை வீழ்த்தினார். தோல்வி அடைந்த பிறகு தான் டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஒய்வு அறிவித்த போது அவர் உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினார்.ஒய்வு குறித்து கூறுகையில் தன் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட விரும்புவதாக தெரிவித்தார். 29 வயதே நிரம்பிய வோஸ்னாக்கி 2018ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றவர் வோஸ்னியாக்கி பெற்ற ஒரே ஒரு கிராண்ட்சிலாம் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. .
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025