விஜய் ஹசாரே டிராபி: தொடர்ந்து வெற்றி பெறும் தமிழ்நாடு அணி..! 82 ரன்னில் சுருண்ட சர்வீசஸ் அணி..!

விஜய் ஹசாரே டிராபியின் நேற்றைய இரண்டாவது போட்டியில் தமிழ்நாடு – சர்வீசஸ் அணி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங்மைதானத்தில் நடைபெற்றது.இப்போட்டியில் சர்வீசஸ் அணி பந்து வீச முடிவு செய்தது.
முதலில் இறங்கிய தமிழ்நாடு அணி ஆட்டம் தொடக்கத்தில் இருந்து வரிசையாக விக்கெட் இழந்தது. 55 ரன்களுக்கும் நான்கு விக்கெட்டுக்களை பிரிகொடுத்த கொடுத்த நிலையில் 5-வது விக்கெட்டுக்கு இறங்கிய ஹரி நிஷாந்த் , தினேஷ் கார்த்திக் இருவரும் இணைந்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.
ஹரி நிஷாந்த் 73 , தினேஷ் கார்த்திக் 95 ரன்களுடன் வெளியேறினார். இறுதியாக தமிழ்நாடு அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழந்து 294 ரன்கள் எடுத்தது. பின்னர் 295 ரன்கள் இலக்குடன் இறங்கிய சர்வீசஸ் அணி , தமிழ்நாடு அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 82 ரன்னில் சர்வீசஸ் அணி சுருண்டது.
இதனால் தமிழ்நாடு அணி 212 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.தமிழ்நாடு அணி சார்பில் கிருஷ்ணமூர்த்தி விக்னேஷ் 5 விக்கெட்டும், எம் முகமது 3 விக்கெட்டும் வீழ்த்தினர். தமிழ்நாடு அணி தொடர்ந்து இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.