“வெற்றி உங்களுக்கு தான்”…இலங்கை போட்டிக்கு முன் ஜெமிமா நெகிழ்ச்சி பேச்சு!

இலங்கை அணிக்கு எதிரான போட்டிக்கு முன் இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமா சக வீராங்கனைகளுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக பேசியுள்ளார்.

Jemimah

துபாய் : மகளிர் டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் இன்று நடைபெற இருக்கும் போட்டியில் இலங்கை அணியை இந்தியா எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் கட்டாயமாக வெற்றிபெறவேண்டும் என்ற நிலையில் இந்திய அணி இருக்கிறது. எனவே, இந்த முக்கியமான போட்டியில், தங்களுடைய அணி வீராங்கனைகளுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக ஜெமிமா பேசியுள்ளார்.

போட்டிக்கு முன்பு வலைப்பயிற்சியிலிருந்த ஜெமிமா சக வீராங்கனைகளுடன் பேசியதை பிசிசிஐ வீடியோவாக கொடுத்த பேட்டியில் பேசியதாவது, “இந்த போட்டியில் வெற்றிபெற்றால் அந்த வெற்றியை நான் என்னுடைய அணி வீராங்கனைகளுக்குத் தான் அர்ப்பணிப்பேன். அவர்கள் அந்த அளவுக்கு தங்களால் முடிந்த விளையாட்டைக் கொடுத்து வருகிறார்கள். எனவே, அவர்களுக்குத் தான் வெற்றிகள் அனைத்தும் சேரும்” எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் இந்த தொடர் தனக்குச் சரியாக அமையவில்லை என்பதை ஒப்புக் கொண்டும் பேசினார். அது குறித்துப் பேசிய அவர், “கண்டிப்பாக நான் நினைத்தது போல இந்த தொடர் எனக்கு அமையவில்லை. ஆனால், என்னிடம் இன்னும் நம்பிக்கை அதிகமாக இருக்கிறது. எனவே, என்னால் முடிந்த அளவுக்குச் சிறப்பாக விளையாட முயற்சி செய்துகொண்டே தான் இருப்பேன்”, எனக் கூறியுள்ளார்.

இப்படியான முக்கியமான போட்டிகளில் சக வீராங்கனைகளுக்கு உத்வேகம் கொடுக்கும் வகையில், ஜெமிமா பேசியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த உலகக்கோப்பை தொடரில் 2 போட்டிகள் தோல்வி அடைந்து புள்ளி விவர பட்டியலில் 4-வது இடத்தில் இருக்கிறது. எனவே, முன்னுக்குச் செல்லவேண்டும் என்றால் அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றால் தான் செல்ல முடியும். இதன் காரணமாக இன்றைய போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Team India (@indiancricketteam)

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்