காஷ்மீர் முன்னள் முதல்வரை தொடர்பு கொள்ள முடியவில்லை! வைகோ உச்சநீதிமன்றத்தில் மனு!

Published by
மணிகண்டன்

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இரண்டு யூனியன் பிரதேசங்களாக அம்மாநிலம் பிரிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பும் ஆதரவும் வந்தவண்ணம் இருக்கிறது.  சர்வதேச அளவிலும் இதே நிலைதான்.

காஷ்மீர் மாநிலத்தின் முக்கிய அரசியல் பிரமுகர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியானது. இதில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இதனை உள்துறை அமைச்சர் அமித்ஷா மறுப்பு தெரிவித்து, பரூக் ஆபத்துல்லாவை கைது செய்யவுமில்லை, அவர் வீட்டுக் காவலிலும் இல்லை, அவர் சுதந்திரமாகவே உள்ளார் என கூறினார்.

இந்நிலையில் மாநிலங்களவை உறுப்பினரும் மதிமுக கட்சி தலைவருமான வைகோ அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் தங்கள் கட்சி சார்பி; 15ஆம் தேதி மாநாடு நடக்க உள்ளது. அந்த மாநாட்டிற்கு முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களை அழைத்து வருகின்றோம். அந்த மாநாட்டிற்காக காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை சந்தித்து அழைப்பிதழ் கொடுக்க தீர்மானித்தோம். ஆனால் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. அவர் எங்கு இருக்கிறார் என்றும் தெரியவில்லை. அவரை கண்டறிந்து தருமாறு ஆட்கொணர்வு மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் வைகோ தாக்கல் செய்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருப்பது, மாநிலங்களவை உறுப்பினர் என்பதால் கண்டிப்பாக வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். மேலும், காஷ்மீரில் அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டுக் காவலில் வைத்து இருப்பது தொடர்பான சர்ச்சைகளுக்கு இதன் மூலம் பதில் கிடைக்கும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Published by
மணிகண்டன்

Recent Posts

“முதல்வர் ஸ்டாலின் இனவாதக் கருத்தை முன்வைப்பது மலிவானது” – ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்!!

சென்னை : ஆளுநர் ஆர். என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா…

17 mins ago

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: “ஆளுநருக்கு எந்த தொடர்பும் இல்லை” -ஆளுநர் மாளிகை விளக்கம்!

சென்னை :   இன்று சென்னையில் நடைபெற்ற  இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…

2 hours ago

“திராவிடம் என்ற சொல் அடித்தட்டு மக்கள் வாழ்வின் பேரொளி”..எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…

2 hours ago

ஆளுநரா? ஆரியநரா? ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…

3 hours ago

தமிழகத்தில் சனிக்கிழமை (19-10-2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…

3 hours ago

தமிழ்தாய் வாழ்த்தில் விடுபட்ட “திராவிட நாடு.”., ஆளுநர் விழாவில் சலசலப்பு.!

சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…

4 hours ago