இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. நேற்று 2-வது டி20 போட்டி நடைபெற்றது.இப்போட்டியில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 182 ரன்கள் எடுத்தனர்.
183 இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 19 ஓவரில் 147 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதனால் இலங்கை அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதற்கு முன் நடந்த முதல் போட்டியில் இலங்கை அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இலங்கை அணி தொடரை கைப்பற்றியது.
இப்போட்டியில் பாகிஸ்தான் வீரர் உமர் அக்மல் இறங்கிய முதல் பந்திலேயே தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதன்மூலம் சர்வேதேச டி20 கிரிக்கெட்டில் டக் அவுட்டான வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார். பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் அஃப்ரிடியை பின்னுக்குத்தள்ளி இரண்டாமித்தை பிடித்துள்ளார்.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அஃப்ரிடி 8 முறை டக் அவுட் ஆகியுள்ளார். உமர் அக்மல் 9 முறை அவுட் ஆகியுள்ளார். இந்த பட்டியலில் இலங்கையின் முன்னாள் வீரர் திலகரத்னே தில்ஷான் 10 முறை டக் அவுட்டாகி முதலிடத்தில் உள்ளார்.
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்காக சிவில் பாதுகாப்பு விதிகளின்…
சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…
டெல்லி : ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடனான போர் பதற்றம்…
ஆந்திரப் பிரதேசம் : பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா நுழைந்து பயங்கரவாத முகாம்களைத் தாக்கியதை அடுத்து, கோபமடைந்த பாகிஸ்தான், எல்லையைத் தாண்டி…