உக்ரைன்- ரஷ்ய போர்: வைரலாகும் ரஷ்ய டென்னிஸ் வீரர் கருத்து..!

Published by
murugan

உக்ரைன் மீதான தாக்குதலுக்கு மத்தியில் ரஷ்ய டென்னிஸ் வீரர் கேமரா லென்ஸில்  நோ வார் ப்ளீஸ் (No War Please) எழுதினார் இது சமூக ஊடகங்களில் கடுமையாக வைரலானது.

ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொண்டுள்ள உக்ரைன் உலகம் முழுவதிலும் இருந்து உதவிக்காக கெஞ்சுகிறது. ஆனால் இதுவரை உக்ரைனுக்கு எந்த பெரிய நாட்டிலிருந்தும் நேரடி உதவியைப் பெற முடியவில்லை. ரஷ்ய ராணுவம் தொடர்ந்து உக்ரைனுக்குள் நுழைந்து நகரங்களை கைப்பற்றி வருகிறது. இதற்கிடையில், பலம் வாய்ந்த நாடாக இருந்தாலும் சரி பலவீனமான நாடாக இருந்தாலும் சரி போரை யாருக்கும் பிடிக்காது.

இந்நிலையில், ரஷ்ய டென்னிஸ் வீரர் போட்டி முடிந்ததும் உக்ரைன்-ரஷ்யப் போரைப் பற்றி கேமராவில் லென்ஸில் கருத்து ஒன்றை எழுதினார். அது தற்போது வைரலாக பரவிவருகிறது. அது என்னவென்றால் “நோ வார் ப்ளீஸ்”  என எழுதினார். இந்த டென்னிஸ் வீரரின் பெயர் Andrey Rublev. இவரின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மக்கள் இந்த டென்னிஸ் வீரரை வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

அனைத்து நாடுகளும், ஐ.நா.வும் எச்சரித்த போதிலும் ரஷ்யா தொடர்ந்து உக்ரைனைத் தாக்கி வருகிறது. இந்த தாக்குதல்களால் உக்ரைன் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், ரஷ்யா போன்ற இராணுவ சக்திக்கு முன்னால் உக்ரைன் இராணுவம் நீண்ட காலம் நீடிப்பது சாத்தியமில்லை. அத்தகைய சூழ்நிலையில், விரைவில் ரஷ்யா உக்ரைனின் பெரும்பாலான நகரங்களைக் கைப்பற்ற முடியும்.

ஆனால் ரஷ்யாவின் இந்த தாக்குதலால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். இத்தனை பதட்டமான சூழலுக்கு மத்தியில ரஷ்ய டென்னிஸ் வீரர் ஒருவரின் இந்த செயல் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

Published by
murugan

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

11 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

16 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

16 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

16 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

16 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

16 hours ago