சுரேஷ் ரெய்னாவின் உறவினர் வீட்டில் கொள்ளையடித்து கொலை செய்த வழக்கில் மேலும் இருவர் கைது

Default Image

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவின் உறவினர்கள் வீட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளையடித்து  கொலைகள் செய்த வழக்கில் இருவரை முசாபர்நகர் போலீசார் கைது செய்துள்ளனர்.

2020 செப்டம்பரில் கும்பலைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த குற்றத்தில் தொடர்புடைய மற்றொரு நபர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிடிபட்டார்.

குற்றம் சாட்டப்பட்ட அனைத்து குற்றவாளிகளும் பஞ்சாபின் பதான்கோட்டில் உள்ள ரெய்னாவின் மாமா வீட்டிற்குள் நுழைந்தனர், அங்கு அவர்கள் குடும்ப உறுப்பினர்களை இரக்கமின்றி தாக்கி பணம் மற்றும் மதிப்புமிக்க பொருட்களுடன் தலைமறைவானார்கள்.

கிரிக்கெட் வீரரின் மாமாவும் அவரது உறவினரும் பலத்த காயம் அடைந்து இறுதியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்