மாவோ பேட்ஜ் அணிந்து வருகை; தங்கப்பதக்கம் வென்ற சீன வீராங்கனைகளை எச்சரித்த ஒலிம்பிக் கமிட்டி..!

Published by
Edison

டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் பெறும் போது மாவோ சேதுங் பேட்ஜ்களை அணிந்த இரு சீன சைக்கிள் விளையாட்டு வீராங்கனைகளை,ஐஓசி எச்சரிக்கை விடுத்தது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஜூலை 23 ஆம் தேதி தொடங்கிய நிலையில்,பல்வேறு போட்டிகள் நடைபெற்று இன்றுடன் நிறைவடைந்துள்ளது.

இதற்கிடையில்,ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் பெறும் போது இரண்டு சீன சைக்கிள் விளையாட்டு வீராங்கனைகள் பாவ் ஷன்ஜு மற்றும் சோங் தியான்ஷி ஆகியோர் சீனாவின் முன்னாள் கம்யூனிச தலைவரான மாவோவின் உருவப்படம் இடம்பெற்ற பேட்ஜ்களை அணிந்து வந்தனர்.இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து,சீன ஒலிம்பிக் கமிட்டியை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐஓசி) எச்சரித்தது.

மேலும்,எந்தவொரு மதம் சார்ந்த, அரசியல் சார்ந்த பிரசாரங்களை ஒலிம்பிக் அரங்கில் மேற்கொள்வதை ஏற்க முடியாது என சர்வதேச ஒலிம்பிக் சங்கம்,  தெரிவித்துள்ளது.

அதன்பின்னர்,இது மீண்டும் நடக்காது என்று சீன தரப்பு உறுதியளித்ததால் இந்த வழக்கு தற்போது முடிவடைந்தது என்று ஐஓசி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளது.ஆனால் சீன விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் சாசனத்தை மீறினார்களா இல்லையா என்பதை ஐஓசி குறிப்பிடவில்லை.

சாண்டர்ஸின் ‘X’ அடையாளம்:

அதே போல,ஒலிம்பிக் ஷாட் புட்டில்(குண்டு எறிதல்) வெள்ளிப் பதக்கம் வென்ற பிறகு அமெரிக்க தடகள வீராங்கனை ரேவன் சாண்டர்ஸ் பதக்கம் பெறும்போது ஒலிம்பிக் மேடையில் தனது கைகளை அவர் தலைக்கு மேலே ஒரு X வடிவத்தில் உயர்த்தினார்.

பின்னர் அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு அளிக்கும் ஆதரவின் வெளிப்பாடு என்று விளக்கினார்.பின்னர், யுனைடெட் ஸ்டேட்ஸ் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் கமிட்டி (யுஎஸ்ஓபிசி)  இந்த சைகை ஒலிம்பிக் விதிகளை மீறவில்லை,ஏனெனில் இது “இன மற்றும் சமூக நீதிக்கு ஆதரவாக அமைதியான வெளிப்பாடு (அது) தனது போட்டியாளர்களை மதிக்கிறது என்று தெரிவித்தது.

Published by
Edison

Recent Posts

RRvRCB : மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பிய பெங்களூரு! ராஜஸ்தானை வீழ்த்தி RCB அபார வெற்றி!

ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…

8 hours ago

ஆளுநர் விவகாரம் : “உச்சநீதிமன்றம் வரம்பு மீறுகிறது!” கேரளா ஆளுநர் கடும் விமர்சனம்!

திருவனந்தபுரம் : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலம் தாழ்த்துகிறார், அரசியலமைப்பு சட்ட…

9 hours ago

RRvRCB : இதுதான் டார்கெட்! பெங்களூரு வெற்றிக்கு 174 ரன்கள் இலக்கு வைத்த ராஜஸ்தான்!

ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…

10 hours ago

RRvRCB : வெற்றிப் பாதைக்கு திரும்ப போவது யார்? RCB ஃபீல்டிங்.! RR பேட்டிங்!

ஜெய்ப்பூர் : இன்று (ஏப்ரல் 13) ஐபிஎல் 2025-ல் 28வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியும் , ராயல்…

12 hours ago

“என்னை சுட்டுப்பிடிக்க உத்தரவா.?” பதறிய வரிச்சியூர் செல்வம்., பரபரப்பு பேட்டி!

மதுரை : கோவை போலீசார் இன்று ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்ததாக செய்திகள் வெளியாகின. அதில், மதுரையை சேர்ந்த ரவுடி…

12 hours ago

“நான் துணை முதலமைச்சரா.?” பதறிப்போன செல்வப்பெருந்தகை! 15 நாட்கள் கெடு உத்தரவு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி தான். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு போன்ற கோரிக்கைகள் தமிழக…

13 hours ago