வாழைப்பழத்தால் வந்த சோதனை.! டென்னிஸ் வீரரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.! வைரலாகும் வீடியோ.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் வீரர் ஒருவர் தகுதிச்சுற்றில் விளையாடி ஓய்வில் அமர்ந்திருந்த போது ஒரு சிறுமியை கூப்பிட்டு, தன்னிடமிருந்த வாழைப்பழத்தை கொடுத்து அதை உரித்து தரும்படி கேட்டுள்ளார்.
  • இதனை கண்ட நடுவர் ஜான் ப்ளோம் உடனடியாக அந்த சிறுமியை பார்த்து பழத்தை திரும்ப அந்த வீரரிடமே அளிக்கும்படி கூறினார். வீரரின் செயலுக்கு எதிர்ப்பும், நடுவரின் செயலுக்கு பாராட்டுகளும் குவிந்தது.

இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் போட்டி  விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது. இந்த தொடருக்கான தகுதிச்சுற்றில் விளையாடிய பிரான்ஸை சேர்ந்த டென்னிஸ் வீரர் எலியட் பெஞ்செட்ரிட் என்பவர் வாழைப்பழத்தால் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதாவது டென்னிஸ் போட்டிகளில் பந்துகளை எடுப்பதற்காக சிலர் சேர்க்கப்படுவார்கள். பந்து எடுப்பவர்களுக்கு பெரும்பாலும் டென்னிஸ் பயிற்சி பெற்றவர்களாக இருப்பார்கள், பின்னர் டென்னிஸ் அனுபவத்திற்காக அவர்கள் பந்துகளை எடுக்கும் பணியில் ஈடுபடுவார்கள்.

இந்நிலையில், டென்னிஸ் போட்டியின் நடுவே ஓய்வில் அமர்ந்திருந்த போது பிரான்ஸ் வீரர் எலியட் பெஞ்செட்ரிட் சாப்பிடுவதற்கு தன்னிடமிருந்த வாழைப்பழத்தை எடுத்தார். அப்போது அங்கு பந்துகளை எடுத்துக்கொண்டிருக்கும் ஒரு சிறுமியை கூப்பிட்டு, தன்னிடமிருந்த வாழைப்பழத்தை கொடுத்து அதை உரித்து தரும்படி கேட்டுள்ளார், பின்னர் அந்த பெண் டென்னிஸ் வீரர் கேட்கிறார் என்று, நினைத்து அந்த சிறுமியும் வாங்க இதனை திடீரென கண்ட நடுவர் ஜான் ப்ளோம் உடனடியாக அந்த சிறுமியை பார்த்து பழத்தை திரும்ப அந்த வீரரிடமே அளிக்கும்படி கூறினார், அந்த சிறுமியும் உடனடியாக வீரரிடம் திரும்ப கொடுத்துவிட்டது.

பின்னர் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் பலரும் வீரரின் செயலுக்கு கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். சிலர் அந்த சிறுமி வீரர்களின் வேலைக்காரர்கள் இல்லை என்றும், அவரின் வேலையை மட்டும் பார்க்க விடுங்கள் என்றும், அவர்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர். மேலும் நடுவரின் செயலுக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“வீரத்தின் அடையாளம் குங்குமம்”..பிரதமர் மோடி பேச்சு!

மத்திய பிரதேசம் :  இந்தியா vs பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த போரில்…

15 minutes ago

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு…

45 minutes ago

“பொறுப்புகள் கொடுக்குறது நீக்குறதுலாம் செல்லாது நான் இருக்கேன்” -அன்புமணி ராமதாஸ் அதிரடி!

சென்னை : பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு பெரிய அளவில் பேசுபொருளாக வெடித்துள்ளது.…

1 hour ago

“ஐயா தான் நமக்கு குலசாமி, குல தெய்வம்” – ராமதாஸை புகழ்ந்து பேசிய அன்புமணி.!

சென்னை : பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் கருத்து வேறுபாடு உச்சத்தை எட்டியுள்ளது. அன்புமணியின் ஆதரவாளர்களை கட்சியில்…

2 hours ago

முதல்வர் வருகை: ‘மதுரையில் கால்வாய் துணியால் மறைப்பு’ – ஆட்சியர் விளக்கம்.!

மதுரை : நாளை (ஜூன் 1) மதுரையில் திமுக பொதுக்குழுக் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இந்த நிலையில், இன்று…

2 hours ago

“பாமகவில் நிலவும் பிரச்னைகளுக்கு நான் காரணமா? இதை கேட்டு கண்ணீர் வடித்தேன்” – ஜி.கே.மணி வேதனை!

சென்னை :பாமக கட்சியில் தற்போது அன்புமணி தனியாக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்துவதும், தானே தலைவர் என அறிவிப்பதும், பதிலுக்கு…

3 hours ago