இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப்போட்டி இன்று ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்து 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. தொடக்க வீராங்கனை மூனே, 54 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 71 ரன்கள் எடுத்தார். இந்திய அணித் தரப்பில் டிபி சர்மாவும் கயாக்வாடும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி தொடக்க வீராங்கனை மந்தனா, 37 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் எடுத்து, 15-வது ஓவரில் அவர் ஆட்டமிழந்தார். இதைத்தொடர்ந்து வந்த இந்திய அணி வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து தடுமாறியது. வேகமாக ரன்கள் எடுக்கவேண்டும் என்கிற நிலையில் விக்கெட்டுகளை பறிகொடுத்து, இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் 144 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலிய மகளிர் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. இதில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் ஜெஸ் ஜொனாஸ்ஸென் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
சென்னை : நேற்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று விழுப்புரம், தைலாபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை…
பெங்களூரு : இன்று (ஏப்ரல் 9) நடைபெறும் ஐபிஎல் 2025-ன் 24-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB)…
சென்னை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக சட்டப்பேரவையில் ஆளும் தமிழக அரசால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால…
டொமினிகன் : இசை நிகழ்ச்சிக்காக ஒன்றுகூடி ஜாலியாக, வைப் செய்து கொண்டிருந்தவர்களின் ஆனந்தக்குரல், ஒரே நொடியில் அழுகுரலாக மாறிவிட்டது. ஆம்,…
சென்னை : இன்று (ஏப்ரல் 10) அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் உலகம் முழுக்க ரசிகர்கள்…