#Tokyo2020: துப்பாக்கி சுடுதல் போட்டியில் சொதப்பிய துப்பாக்கி, வெளியேறிய இந்திய வீராங்கனை!

Published by
பாலா கலியமூர்த்தி

துப்பாக்கி சுடுதல் தகுதி சுற்று போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்ற மனு பாக்கரின் துப்பாக்கி கோளாறு காரணமாக இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தார்.

பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் தகுதி சுற்றில் இந்தியா சார்பாக மனு பாக்கர் பங்கேற்றுள்ளார். துப்பாக்கி சுடுதல் தகுதி சுற்றில் முன்னணியிலிருந்த மனு பாக்கரின் துப்பாக்கி கோளாறு காரணமாக சுமார் 20 நிமிடங்கள் அதை சரி பார்ப்பதில் நேரத்தை இழந்திருக்கிறார்.

இந்த சுற்றில் 36 நிமிடங்களில் 44 ஷாட்கள் சுட வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டார். அப்படியும் 600க்கு 575 புள்ளிகள் பெற்று 12வது இடத்துக்கு வந்துள்ளார். 577 புள்ளிகள் எடுத்திருந்தால் அவர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருக்க வாய்ப்பு இறுதியாகவும் கூறப்படுகிறது.

இதனால் தகுதி சுற்றில் இருந்து மனு பாக்கர் வெளியேறினார். துப்பாக்கி சுடும் மனு பாக்கரிடமிருந்து பதக்கம் கிடைக்கும் என்று நாடு நம்பியது. அவரது தொடக்க செயல்திறன் நன்றாக இருந்தது, ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் இறுதிப் போட்டிக்கு வரத் தவறிவிட்டார். இந்தியா சார்பாக பங்கேற்ற மற்றொரு வீராங்கனை யஷஸ்வானி 574 புள்ளிகளைப் பெற்று 13 வது இடத்தில் இருந்தார்.

இறுதிப் போட்டியில் இடம் பெற முதல் 8 இடங்களைப் பெறுவது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது. துப்பாக்கி சுடுதல் போட்டியில், சீனாவின் ஜியான் ரான்சிங் 587 புள்ளிகளை பெற்று சாதனை படைத்தார். கிரேக்கத்தின் அண்ணா கோரக்கி மற்றும் ரஷ்யாவின் ஒலிம்பிக் கமிட்டியின் பி விட்டலினா மூன்றாவது இடத்தைப் பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

IND v ENG : இங்கிலாந்தை சுருட்ட களமிறங்கும் வருண் சக்கரவர்த்தி! சம்பவம் லோடிங்..

IND v ENG : இங்கிலாந்தை சுருட்ட களமிறங்கும் வருண் சக்கரவர்த்தி! சம்பவம் லோடிங்..

ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…

9 hours ago

“10 படம் தோல்வி ஆகும்னு நினைக்கல”.. வேதனைப்பட்ட இயக்குநர் சுசீந்திரன்!

சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…

9 hours ago

27 ஆண்டுகளுக்கு பிறகு இமாலய சாதனை படைத்த பாஜக! வெற்றி கொண்டாட்டத்தில் தொண்டர்கள்!

டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக  சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…

10 hours ago

INDvENG : 2வது ஒருநாள் போட்டி எப்படி இருக்கும்? பிட்ச் நிலை, வானிலை நிலவரம், வீரர்கள் விவரம் இதோ..,

கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…

11 hours ago

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : திமுக வெற்றி…கொண்டாட்டத்தில் தொண்டர்கள்!

ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…

11 hours ago

நோட் பண்ணிக்கோங்க..’ரோஹித் சர்மா தான் தாக்கத்தை ஏற்படுத்துவார்”..கெவின் பீட்டர்சன் பேச்சு!

ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…

12 hours ago