டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் தீபக் புனியா காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
இன்று நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்தம் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஆண்கள் 86 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் தீபக் புனியா,நைஜீரியாவின் அகியோமோரை எதிர்கொண்டார்.ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய தீபக்,இப்போட்டியின் இறுதியில் 12-1 என்ற கணக்கில் நைஜீரிய வீரரை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
2001-ல் ரமேஷ் குமார் மற்றும் பல்வீந்தர் சிங் ஆகியோர் ஜுனியர் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றிருந்தனர்.அதன்பிறகு,18 வருடங்கள் கழித்து ஜுனியர் உலக சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவுக்கு தீபக் தங்கம் வென்று கொடுத்து பெருமை சேர்த்தார்.இதனால்,தற்போது ஒலிம்பிக்கிலும் அவர் தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…
பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…
சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…