டோக்கியோ ஒலிம்பிக்:துப்பாக்கிச் சுடுதல் 25 மீட்டர் தகுதிச் சுற்றில் மனு பாக்கர் 5 ஆவது இடம்..!

Published by
Edison

டோக்கியோ ஒலிம்பிக்: பெண்கள் 25 மீ பிஸ்டல் தகுதி சுற்றில் மனு பாக்கர் 5 வது இடத்தைப் பிடித்துள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் 25 மீட்டர் மகளிர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் ரெபிட் மற்றும் துல்லியம் (பிரிசிஷன்) என்ற இரண்டு தகுதிச் சுற்று போட்டிகள் இன்று நடைபெற்றன. இந்தப் போட்டியில் இந்தியா சார்பில் மனு பாக்கர் மற்றும் ராஹி சர்னோபட் ஆகியோர் பங்கேற்றனர்.

ராஹி சர்னோபட்:

முதலில் இந்தியாவின் ராஹி சர்னோபட் பங்கேற்றார்.அதில் முதல் சீரிஸில் மொத்தமாக 96 புள்ளிகள் பெற்றார். அதன்பின்னர் இரண்டாவது சீரிஸில் 97 புள்ளிகள் மற்றும் கடைசி சீரிஸில் 94 புள்ளிகளை பெற்றார். இதனால், மொத்தமாக பிரிசிஷன் தகுதிச் சுற்றில் ராஹி சர்னோபட்  287 புள்ளிகள் எடுத்து 25 வது இடத்தை பெற்றார்.

மனு பாக்கர்:

இதனைத் தொடர்ந்து,களமிறங்கிய இந்தியாவின் மனு பாக்கர் முதல் சீரிஸில் 97 புள்ளிகளும்,இரண்டாவது சீரிஸில் 97  புள்ளிகளும் எடுத்தார். இதனையடுத்து,கடைசி சீரிஸில் மனு பாக்கர் 98 புள்ளிகள் எடுத்தார்.இதனால்,பிரிசிஷன் தகுதிச் சுற்றில் மனு பாக்கர் மொத்தம் 292 புள்ளிகள் எடுத்து,5 வது இடத்திலும் உள்ளார்.

ஆனால்,செர்பியாவின் ஜோரோனா அருனோவிக் 296 புள்ளிகள் பெற்று முதலிடத்திலும்,கிரீஸ் நாட்டின் கோரகக்கி 294 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

ரெபிட் தகுதிச் சுற்று:

மேலும்,25 மீட்டர் மகளிர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில்,ரெபிட் தகுதிச் சுற்று நாளை  நடைபெறும். இந்த இரண்டிலும் எடுக்கும் புள்ளிகளை வைத்து முதல் 8 இடங்களை பிடிப்பவர்கள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவார்.

மனு பாக்கர் கடந்த 25 ஆம் தேதி நடைபெற்ற 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் பங்குகொண்டார். மொத்தம் ஆறு சுற்றுகளாக நடக்கும் தகுதி ஆட்டத்தில் முதல் சுற்றில் 100-க்கு 98 புள்ளிகள் பெற்று முன்னிலையிலிருந்தார் மனு பாக்கர்.

துப்பாக்கி கோளாறு:

இவ்வாறு,வெற்றியை நோக்கி சென்று கொண்டிருந்த மனு பாக்கரின் ஸ்கோர் இரண்டாம் சுற்றின் நடுவே 160-க்கு 154 புள்ளிகள் பெற்ற நிலையில்,அவரது துப்பாக்கியில் கோளாறு ஏற்பட்டது தெரியவந்தது. இந்த இடைவெளியில் வேறு வழி இல்லாமல் மீண்டும் சோதனை தளத்திற்குச் சென்று பயிற்சியாளருடன் தனது துப்பாக்கியைச் சரிசெய்தார்.

தோல்வி:

ஆனால், அதற்குள் முதலில் ஆட்ட நேரமான 75 நிமிடங்களில் சுமார் 20 நிமிடங்களை இழந்தார்.மேலும்,36 நிமிடங்களில் 44 ஷாட்கள் சுட வேண்டிய இக்கட்டான சூழலுக்குத் தள்ளப்பட்டார்.அதிலும் எடுத்துவந்த துப்பாக்கியைச் சோதனை செய்யவே அவருக்கு 4-5 நிமிடங்கள் ஆனது.இறுதியில்,கடைசி 34 நிமிடங்களில் 575 புள்ளிகள் பெற்று வெற்றிக்கு அருகில் சென்று தோல்வியை சந்தித்தார்.ஏனெனில்,577 புள்ளிகள் எடுத்திருந்தால் அவர் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருக்கலாம் .இதனால்,இப்போட்டியில் பதக்க வாய்ப்பை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Edison

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

12 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

12 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

12 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

13 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

13 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

13 hours ago