டோக்கியோ ஒலிம்பிக்: வில்வித்தையில் தீபிகா குமாரி காலிறுதிக்கு முன்னேற்றம்….!

Published by
Edison

டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை தனிநபர் போட்டியில்,காலிறுதியின் முந்தைய சுற்றில் வெற்றி பெற்று இந்திய வீராங்கனை தீபிகா குமாரி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32 வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது.அதன்படி,நேற்று முன்தினம் நடைபெற்ற மகளிர் தனிநபர் வில்வித்தை ரீகர்வ் முதல் சுற்றில் தீபிகா குமாரி,பூடான் வீராங்கனை கர்மாவை எதிர்கொண்டார்.இறுதியில்,மிக எளிதாக 6-0 என்ற கணக்கில் கர்மாவை வீழ்த்தி தீபிகா வெற்றியடைந்தார்.

காலிறுதியின் முந்தைய சுற்று :

மேலும்,இரண்டாவது சுற்றில் அமெரிக்க வீராங்கனை ஜெனிபருடன் கலந்து கொண்டார்.பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 6-4 (25-26, 28-25, 27-25, 24-25, 26-25) என்ற கணக்கில் ஜெனிபரை வீழ்த்தி தீபிகா காலிறுதியின் முந்தைய சுற்றுக்குள் நுழைந்தார்.

உலகின் நம்பர் 1 வீராங்கனை:

இந்நிலையில்,இன்று நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் காலிறுதியின் முந்தைய சுற்றில் உலகின் நம்பர் 1 வீராங்கனையும் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையுமான தீபிகா குமாரி,தரவரிசையில் 8 வது இடத்தில் இருக்கும் ரஷ்ய வீராங்கனை செனியா பெரோவாவை எதிர்கொண்டார்.

முதல் செட்:

இப்போட்டியில்,தீபிகாவுக்கு இணையாக ரஷ்ய வீராங்கனை பெரோவா திறமையை வெளிப்படுத்தினார்.இருப்பினும், முதல் செட்டை 28-25 என்ற புள்ளி கணக்கில் தீபிகா முன்னிலை வகித்தார்.

விறுவிறுப்பான போட்டி:

பின்னர்,இரண்டாவது செட்டை 26-27 என்ற புள்ளி கணக்கில் ரஷ்யாவின் பெரோவா கைப்பற்றினார்.ஆனால்,மூன்றாவது செட்டை 28-27 என்ற புள்ளி கணக்கில் தீபிகா கைப்பற்றினார். இந்த நிலையில் நான்காவது செட்டில் 26-26 என்ற புள்ளி கணக்கில் இருவரும் சமநிலையில் இருந்தனர்.

இதனால்,வெற்றியை கடைபிடிக்க சூட் ஆஃப் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில்,பெரோவா 7 புள்ளிகள் மட்டுமே பெற்றார். ஆனால்,தீபிகா 10 புள்ளிகள் பெற்றார்.இதனால் 6-5 என்ற கணக்கில் பெரோவாவை வீழ்த்தி, தீபிகா வெற்றி பெற்றார்.இதனால்,காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

நேற்று அவரது கணவர் அதானு தாஸ்,வில்வித்தை தனிநபர் காலிறுதியின் முந்தைய சுற்றில் கொரிய குடியரசின் ஜின்-ஹைக்  ஓவை, 6-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Edison

Recent Posts

பாகிஸ்தானை வென்றதில் திருப்தி இல்லை! “சீக்கிரம் முடித்திருக்க வேண்டும்” வருந்திய ஸ்ரேயாஸ் ஐயர் வருத்தம்.!

பாகிஸ்தானை வென்றதில் திருப்தி இல்லை! “சீக்கிரம் முடித்திருக்க வேண்டும்” வருந்திய ஸ்ரேயாஸ் ஐயர் வருத்தம்.!

துபாய் : இந்தியா இன்னும் ஆக்ரோஷமாக பேட்டிங் செய்திருந்தால் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை சீக்கிரம் முடித்திருக்க முடியும் என்று ஸ்ரேயாஸ்…

12 minutes ago

“ஜெயலலிதா நினைவு எல்லோரது மனதிலும் இருக்கும்” – நடிகர் ரஜினிகாந்த் மரியாதை.!

சென்னை : அம்மா என அதிமுகவினரால் அன்பாக அழைக்கப்படும் மறைந்த முன்னாள் முதலைமைச்சர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் இன்று. மறைந்து விட்டாலும்,…

2 hours ago

இபிஎஸ் தலைமையில் ஜெ. பிறந்தநாள் விழா! மீண்டும் செங்கோட்டையன் ‘ஆப்சென்ட்’!

சென்னை : அதிமுகவின் உட்கட்சி பிரச்சனை தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. ஜெயலலிதா மறைந்த பிறகு எடப்பாடி…

2 hours ago

தெலுங்கானாவில் பயங்கரம் : சுரங்கத்தில் சிக்கிய 8 தொழிலார்கள்.! 48 மணிநேரமாக தொடரும் மீட்புப்பணிகள்….

நாகர்கர்னூல் : தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் சுரங்கப்பாதை தோண்டும் வேலை நடைபெற்று வந்தது. கடந்த சனிக்கிழமை காலையில்,  டோமலபெண்டா…

3 hours ago

“விஜய் கட்சி ஆரம்பத்ததில் இருந்து..,” விலகல்கள் குறித்து விளக்கம் அளித்த சீமான்!

சென்னை : சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் நிர்வாகிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொன்டு இருப்பதை…

4 hours ago

வாரத்தின் முதல் நாளே உச்சம்… இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.!

சென்னை : தங்கம் விலை கடந்த 53 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.7,480 உயர்ந்துள்ளது. கடந்த டிச.31ஆம் தேதி 22…

4 hours ago