ஹோட்டல் ஊழியர்களுக்கு கொரோனா; அச்சத்தில் ஒலிம்பிக் வீரர்கள் …!

Published by
Edison

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு சென்றுள்ள பிரேசில் அணியின் வீரர்கள் தங்கி இருந்த ஹோட்டலில் சுமார் 8 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகின்ற 23  ஆம் தேதி 32-வது ஒலிம்பிக் போட்டி ஆரம்பிக்கவுள்ளது.இந்த ஒலிம்பிக் போட்டியானது ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்த ஒலிம்பிக் போட்டியில் 205 நாடுகளைச் சேர்ந்த 11,000 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கவுள்ளார்கள்.இதன்காரணமாக,அவர்களுக்கு தினமும் கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், போட்டியில் கலந்து கொள்ளும் 80 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஒலிம்பிக் குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில்,பிரேசில் ஒலிம்பிக் அணி  வீரர்கள் தங்கி இருந்த ஹோட்டலில் இருந்த 8 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

டோக்கியோவின் மேற்கே உள்ள ஹமாமாட்சு நகரில் உள்ள ஹோட்டலில் ஊழியர்களுக்கு கடந்த சனிக்கிழமையன்று வைரஸ் பரிசோதனைகள் செய்யப்பட்டன.அப்போது,ஊழியர்களில் எட்டு பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு  உள்ளது என்றும்,பாதிக்கப்பட்ட நபர்கள் யாரும் விளையாட்டு வீரர்களுடன் தொடர்பு கொள்ளவில்லை என்றும் நகர அதிகாரி  யோஷினோபு சவாடா தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து,பாதிக்கப்பட்ட ஹோட்டல் ஊழியர்களில் ஒருவரின் குடும்பத்தினருக்கும் கொரோனா பாசிடிவ் பரிசோதனை செய்ததாக ஹமாமட்சு அதிகாரிகள் தெரிவித்தனர்.எனினும்,பிரேசில் அணியின் சுமார் 30 பேர் கொண்ட ஜூடோ குழுவினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

டோக்கியோவில் கொரோனா நோய்த்தொற்றுகள் அதிகரித்து வருகின்றன. இதனால்,தற்போது அந்நகரம் அவசரகால வைரஸ் நிலையில் உள்ளது. டோக்கியோவில் நேற்று 1,149 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இது ஜனவரி மாதத்திலிருந்து மிக உயர்ந்த எண்ணிக்கையாகும்.

மேலும்,நேற்று ஜூலை 1 முதல் 13 வரை வந்த 8,000 க்கும் மேற்பட்டவர்களில் ,மூன்று பேருக்கு கொரோனா பாசிடிவ் உறுதி செய்யப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இதனால்,கொரோனா அச்சம் காரணமாக ஒலிம்பிக் வீரர்கள் கடுமையான வைரஸ் விதிகளுக்கு உட்பட்டு ஜப்பானிய மக்களிடமிருந்து பெரும்பாலும் விலகி உள்ளனர்.

இதற்கிடையில்,ஐ.ஓ.சி தலைவர் தாமஸ் பாக், “ஜூலை 23 அன்று தொடங்கவுள்ள போட்டிகளினால் ஜப்பானுக்கு “எந்த ஆபத்தும் வராது”, என்று உறுதியளித்துள்ளார்.

Published by
Edison

Recent Posts

இங்க நான் தான் கிங்.! எலான் மஸ்க் முதலிடம்! டாப் 5 உலக பணக்காரர் லிஸ்ட் இதோ.. 

இங்க நான் தான் கிங்.! எலான் மஸ்க் முதலிடம்! டாப் 5 உலக பணக்காரர் லிஸ்ட் இதோ..

ஜெர்சி சிட்டி : ஆண்டுதோறும் ஏப்ரல் 1ஆம் தேதியன்று ஃபோர்ப்ஸ் பத்திரிகையானது உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிடும். அதன்படி நேற்று…

21 minutes ago

”சேட்டன் வந்நல்லே… சேட்டை செய்ய வந்நல்லே” மீண்டும் கேப்டனாக களமிறங்கும் சஞ்சு சாம்சன்.!

பெங்களூரு : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின்…

1 hour ago

“வக்பு சொத்துகளை மத்திய அரசு அபகரிக்க நினைக்கிறது!” ஆ.ராசா கடும் தாக்கு!

டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை…

1 hour ago

வக்பு வாரிய திருத்த சட்டம் : பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்.!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இன்று வக்பு வாரிய திருத்த சட்டத்தை மக்களவையில் மத்திய சிறுபான்மை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை…

2 hours ago

“டெல்லி நாடாளுமன்றமே வக்பு சொத்தா மாறியிருக்கும்” மத்திய அமைச்சர் பரபரப்பு பேச்சு!

டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வக்பு வாரிய திருத்த சட்டத்தை மக்களவையில் மத்திய சிறுபான்மை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை…

2 hours ago

மும்பை அணியிலிருந்து விலகும் ஜெய்ஸ்வால்.! கோவா அணியில் கேப்டன் பதவி?

மும்பை: உள்ளூர் போட்டிகளில், அடுத்த சீசனில் இருந்து கோவா அணிக்கு விளையாட, மும்பை கிரிக்கெட் வாரியத்திடம் NOC சான்றிதழ் கேட்டிருக்கிறார்…

2 hours ago