டோக்கியோ ஒலிம்பிக்: ஈரான் வீரரை வீழ்த்தி பஜ்ரங் புனியா அரையிறுதிக்கு தகுதி…!

Default Image

ஒலிம்பிக் மல்யுத்தில் பஜ்ரங் புனியா அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

இன்று நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் மல்யுத்தம் 65 கிலோ எடைப் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் பஜ்ரங் புனியா, கிர்கிஸ்தான் வீரர் எர்னாஸரை எதிர்கொண்டார். இப்போட்டியின் இறுதியில் 3-3 என்ற கணக்கில் இருவரும் சமநிலையில் இருந்தனர்.

இருப்பினும் முதல் ரவுண்டிலேயே 3 புள்ளிகளை பஜ்ரங் புனியா பெற்றதால், காலிறுதிக்கு தகுதி பெற்றார். பின்னர், இந்தியாவின் பஜ்ரங் புனியா காலிறுதியில் 2- 1 என்ற கணக்கில் ஈரான் வீரர் மோர்டஸாவை வீழ்த்தினார்.

இதனால், 65 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் பஜ்ரங் புனியா அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். இன்று நடைபெற உள்ள அரையிறுதிப் போட்டியில் அஜர்பைஜான் வீரர் அலியோ ஹஜியுடன் மோத உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்