டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற ஆண்கள் தனிநபர் காலிறுதியின் முந்தைய சுற்றில் வில்வித்தை போட்டியில் அதானு தாஸும்,குத்துச்சண்டையில் அமித் பங்கலும் தோல்வியடைந்துள்ளார்கள்.
டோக்கியோவில் கடந்த 29 ஆம் தேதி நடைபெற்ற ஒலிம்பிக் வில்வித்தை தனிநபர் பிரிவில்,முதலில் 1/32 எலிமினேஷன் போட்டியில் சீன தைபேயின் யூ-செங் டெங்கை 6-4 என்ற கணக்கில் அதானு தாஸ் வெற்றி பெற்றார்.
தொடர் வெற்றி:
இதனைத் தொடர்ந்து,நடைபெற்ற வில்வித்தை தனிநபர் 1/16 எலிமினேஷன் போட்டியில் கொரிய குடியரசின் ஜின்-ஹைக் ஓவை வீழ்த்தி 6-5 என்ற செட் கணக்கில் அதானு தாஸ் வெற்றி பெற்று,காலிறுதியின் முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
ஆதிக்கம்:
இந்நிலையில்,இன்று நடைபெற்ற காலிறுதியின் முந்தைய சுற்றில் ,அதானு தாஸ் ஜப்பானின் தகாஹரு ஃபுருகாவாவை எதிர்கொண்டார்.போட்டியின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஃபுருகாவா முதல் செட்டில் 2-0 என்ற கணக்கில் அதானுவை வீழ்த்தி முன்னிலை பெற்றார்.
விறுவிறுப்பான போட்டி:
ஆனால்,இரண்டாவது செட்டில்,இரண்டு பெரும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தனர்.இதனையடுத்து,அதானு தனது திறமையால் மூன்றாவது செட்டை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி முன்னிலை வகித்தார். பின்னர்,நான்காவது செட்டில் இரண்டு பெரும் மீண்டும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தனர்.
முற்றுப்புள்ளி:
கடைசி செட்டில்,மீண்டும் ஃபுருகாவா 2-0 என்ற கணக்கில் அதானுவை வீழ்த்தி முன்னிலை பெற்றார்.இவ்வாறு,மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 6-4 என்ற புள்ளி கணக்கில் அதானு தாஸை வீழ்த்தி, ஃபுருகாவா வெற்றி பெற்றார்.இதனால்,வில்வித்தை ஆண்கள் தனிநபர் பிரிவில் இந்தியாவின் ஒலிம்பிக் பதக்க கனவுக்கு முற்று புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
குத்துச்சண்டை:
அதேபோல,இன்று நடைபெற்ற ஆண்கள் 52 கிலோ எடை பிரிவுக்கான குத்துச்சண்டையில் காலிறுதிக்கு முந்தையச் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் அமித் பங்கல்,கொலம்பியாவின் மார்டினஸ் உடன் மோதினார்.இதில் அமித் பங்கலை 4-1(28-29,29-27,30-27,29-28,29-28) என்ற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்து மார்டினஸ் வென்றார்.
கடந்த ரியோ ஒலிம்பிக்கில் மார்டினஸ் வெள்ளிப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.இதனால்,அமித் பங்கலின் தற்போதைய ஒலிம்பிக் பதக்க கனவு முடிவுக்கு வந்தது.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…
பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…