கோபப்படாமல் இருப்பதற்கு இதுதான் காரணம் – மனம் திறந்த தோனி..!

Published by
Dinasuvadu desk

கிரிக்கெட் வீரர்களில் அதிக ரசிகர்களை கொண்டவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி. இவர் கேப்டன் ஆக இருந்து பல சாதனைகள் படைத்துள்ளார். ஐசிசி போட்டிகளின் அனைத்து கோப்பைகளையும் வென்று கொடுத்தவர் தோனி மட்டும் தான். இவரை  “கேப்டன் கூல்” என்று அனைவராலும் அழைக்கப்படுகிறார். காரணம் இவர் போட்டியின் போது  மைதானத்தில் வைத்து வீரர்கள் மீது கோவப்படுவதில்லை.
இவர் இந்த வருடம் நடந்து முடிந்த உலககோப்பைக்கு பின் எந்த வித தொடரிலும் விளையாட வில்லை. உலகக்கோப்பைக்கு பின் தனது ஓய்வை அறிவிப்பார் என பலரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் தோனி அது பற்றி எந்த அறிவிப்பும் தெரிவிக்கவில்லை.Image result for dhoni
இந்நிலையில் உலகக்கோப்பைக்கு பின் முதல் முறையாக தோனி ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அதில் ,  “நானும் மற்றவர்களை போல சாதாரண மனிதன் தான் எனக்கும் கோபம் வரும். ஆனால் மற்றவர்களை விட கோபத்தை கட்டுப்படுத்துவதால் எனது கோபம் வெளியே தெரிவதில்லை.
நானும் சில சமயங்களில் வெறுப்பு அடைவேன் ஆனால் அதனை பற்றி சிந்திக்காமல் விரைவில் அதில் இருந்து வெளியே வந்து விடுவேன்.பின்னர் அதற்கான தீர்வை தேடுவதில் தான் எனது  எண்ணம் இருக்கும். அதுவே எனது உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதற்கு சிறந்த வழியாக கையாள்கிறேன் என்று கூறினார்.”
உணர்ச்சிகளை கட்டுப்பாட்டில் வைத்தால் தான் நல்ல தீர்வு கிடைக்கும். முடிவை நினைத்து செயல்பட்டால் அது அதிக நெருக்கடியை தரும் ஆகையால் நான் முடிவை நினைத்து செயல்பட மாட்டேன். ஒரு அணியின் கேப்டன் என்பவர் அனைவரிடமும் ஒன்றாகவும் நேர்மையுடனும் செயல்பட வேண்டும் என கூறியுள்ளார்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

NZvBAN : என்னைக்கும் விடாமுயற்சி…அதிரடி காட்டிய ரச்சின் ரவீந்திரா! அதிர்ந்த பங்களாதேஷ்!

ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும்  ராவல்பிண்டி கிரிக்கெட்…

7 hours ago

இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!

சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…

9 hours ago

என்னை பத்தி ஏன் பேசுறீங்க? அன்புமணி பேச்சால் கடுப்பான மயிலாடுதுறை எம்.பி. சுதா!

சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…

10 hours ago

ஜெயலலிதாவுடன் உரையாடும் வாய்ப்பை பெற்றிருந்தது என்னுடைய கௌரவம்! பிரதமர் மோடி பதிவு!

டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது  பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…

10 hours ago

NZvBAN : தடுமாறிய பங்களாதேஷ்..தூக்கி நிறுத்திய ஜாகிர் அலி! நியூசிலாந்துக்கு வைத்த இலக்கு..

ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…

11 hours ago

தோல்வியை சந்தித்த விடாமுயற்சி…சீக்கிரம் ஓடிடிக்கு வந்த முக்கிய காரணம்?

சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…

12 hours ago