ஒலிம்பிக்கில் பதக்கத்தை உறுதி செய்த லவ்லினா கிராமத்திற்கு கிடைத்த சாலை..!

Published by
Sharmi

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு பதக்கத்தை உறுதி செய்த லவ்லினாவின் கிராமத்திற்கு சாலை அமைக்கும் பணிகளை அரசு தற்போது மேற்கொண்டு வருகிறது.

ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோகெயின் குத்துச்சண்டையில் 69 கிலோ வெல்டர் பிரிவில் ஒலிம்பிக் பதக்கத்தை தற்போது உறுதி செய்துள்ளார். இதன் காரணத்தினால் இவர் சொந்த ஊர் திரும்பும்போது தார் சாலையில் செல்லக்கூடிய வகையில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அசாம் மாநிலத்தின் கோல்கேட் மாவட்டத்தில் உள்ள பாரமுதியா கிராமத்தை சேர்ந்தவர் லவ்லினா.  இவரது கடின உழைப்பால் தற்போது ஒலிம்பிக் போட்டியில் பதக்கத்தை உறுதி செய்துள்ளார். இதன் காரணத்தால் இவருடைய இல்லத்திலிருந்து பாரமுதியா கிராமம் வரையிலான 3.5 கி.மீ தொலைவு வரை தார் சாலை அமைக்கவுள்ளனர்.

மேலும் இது குறித்து உள்ளூர் எம்.எல்.ஏ. பிஸ்வாஜித் தெரிவித்துள்ளதாவது, ஒலிம்பிக்கிலிருந்து தாயகம் திரும்பும் லவ்லினாவிற்கு நாங்கள் பரிசளிக்கும் விதமாக அவரது கிராமத்தின் சாலையை சீரமைத்து வருகிறோம். லவ்லினா தங்கம் வென்று இந்தியா திரும்ப வேண்டும் என்று அசாம் மக்களும், நாட்டில் உள்ள எல்லோரும் பிரார்த்திக்க வேண்டும்.

இதன் மூலமாக இவரது கிராமத்திற்கு அடிப்படையான விளையாட்டு கட்டமைப்புகள் இவ்விடத்தில் உருவாக்கப்படும். இதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் முதலமைச்சர் செய்வார் என்று தெரிவித்துள்ளார்.

Published by
Sharmi

Recent Posts

பஹல்காமில் நடந்தது என்ன? ”எங்களுக்கு உயிர் பயம் வந்துவிட்டது” – தப்பிய சுற்றுலாப் பயணிகள் உருக்கம்.!

பஹல்காமில் நடந்தது என்ன? ”எங்களுக்கு உயிர் பயம் வந்துவிட்டது” – தப்பிய சுற்றுலாப் பயணிகள் உருக்கம்.!

சென்னை : ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது, கடந்த செவ்வாய்க்கிழமை தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில்…

20 minutes ago

காஷ்மீரில் இருந்து சென்னை திரும்பிய தமிழக சுற்றுலா பயணிகள்.!

காஷ்மீர் மாநிலம் பெஹல்காமில் ஏப்ரல் 22ம் தேதி சுற்றுலா பயணிகள் மீதான தீவிரவாத தாக்குதலில் 26 கொல்லப்பட்டு, பலர் படுகாயம்…

49 minutes ago

என்னை கொலை பண்ணிருவேன்னு மிரட்டுறாங்க! போலீசில் புகார் கொடுத்த கவுதம் கம்பீர்!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் பகுதியில், பைசரன் புல்வெளியில் (Baisaran Meadow)…

1 hour ago

Live : பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் முதல் அரசியல் நிகழ்வுகள் வரை!

சென்னை : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக இன்று (ஏப்ரல் 24, 2025) டெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…

2 hours ago

பயங்கரவாத தாக்குதல்…மொத்தம் 5 தீவிரவாதிகள், 3 பாகிஸ்தானியர்? விசாரணையில் வந்த முக்கிய தகவல்!

பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் புல்வெளியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட…

2 hours ago

மயோனைஸ் பிரியர்கள் ஷாக்… “ஓராண்டு தடை”! தமிழ்நாடு அரசு உத்தரவு!

சென்னை : பச்சை முட்டை மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படுவது மயோனைஸ். இதனை மக்கள் சிக்கன் சாப்பிடுவதில் இருந்து…

3 hours ago