Paris Olympic 2024 [file image]
பாரிஸ் ஒலிம்பிக் 2024 : பிரான்ஸ் நாட்டின் தலைநகரமான பாரிஸில் ஒலிம்பிக் போட்டி தொடங்கவுள்ளதால் பாரிஸ் மாகாணம் களைகட்டி வருகிறது.
உலகம் முழுவதும் பெரிதளவு எதிர்பார்க்கப்படும் விளையாட்டு போட்டி தான் ஒலிம்பிக் போட்டிகள், உலக நாடுகள் பங்கேற்கும் இந்த ஒலிம்பிக் போட்டிகள் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவதால் உலகம் முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் விருந்தாக அமையும்.
இந்த மிகப்பெரிய ஒலிம்பிக் திருவிழாவானாது நாளை பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ் நகரத்தில் கோலாகலமாக தொடங்குகிறது. இந்த ஆண்டு தொடங்கியது முதலே பாரிஸில் ஒலிம்பிக் கொண்டாட்டம் களைகட்ட தொடங்கியது. இதற்காக கடந்த ஆண்டு முதல் ஒலிம்பிக் கிராமத்தை அமைக்கும் பணிகளில் பிரான்ஸ் அரசு தீவிரமாக ஈடுபட்டு வந்தது.
நாளை தொடங்க உள்ள ஒலிம்பிக் திருவிழாவில், உலகம் முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடுவதற்கு குவிந்து வருகின்றனர். இந்த 2024 -ம் ஆண்டு ஒலிம்பிக் தொடரில் மொத்தம் 206 நாடுகள் பங்கேற்க உள்ளன. அதில் ஆப்ரிக்காவில் இருந்து 54 நாடுகளும், ஐரோப்பாவில் இருந்து 48 நாடுகளும், அமெரிக்க கண்டத்தில் இருந்து 41 நாடுகளும், ஆசியாவில் இருந்து 44 நாடுகளும் பங்கேற்க உள்ளது. மேலும், மொத்தமாக 2,900 வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
நீச்சல், ஓட்டப்பந்தயம், கூடைப்பந்து, பேட்மிண்டன், குத்துச்சண்டை, மல்யுத்தம், மராத்தான், ஹாக்கி, கோல்ஃப், ஜிம்னாஸ்டிக், படகுப்போட்டி, பாய்மரப்படகுப் போட்டி, வாலிபால், பளுதூக்குதல், டேக்வோண்டோ, துப்பாக்கிச்சுடுதல், ரக்பி, நீளம் தாண்டுதல், தடை ஓட்டம், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் என பல போட்டிகள் நடைபெற உள்ளது.
மேலும், நடப்பு ஒலிம்பிக் தொடரில் ப்ரேக்கிங் டான்ஸ் முதன்முறையாக சேர்க்கப்பட்டுள்ளது. வழக்கம் போல இந்த முறையும் பதக்கப்பட்டியலில் முதலிடம் பிடிப்பதற்கு அமெரிக்கா மற்றும் சீனா நாடுகளுக்கு இடையே போட்டி நிலவும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தியா சார்பில் மொத்தம் 116 வீரர்கள், வீராங்கனைகள் இந்த ஒலிம்பிக்கில் பங்கேற்கின்றனர்.
உலகின் பல நாட்டு வீரர்,வீராங்கனைகளும் ஒலிம்பிக் தொடரில் பங்கேற்க இருப்பதால் லட்சக்கணக்கான மக்கள் போட்டியை காண்பதற்காக வர உள்ளனர். இதனால், பாரீஸ் நகரம் முழுவதும் பல மடங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், நடைபெற உள்ள இந்த ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் ஸ்போர்ட்ஸ்18 நெட்வொர்க் சேனலில் காணலாம் அல்லது ஜியோ சினிமா செயலியில் இலவசமாகவும் காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
அகமதாபாத் : 2025 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி பெங்களூர் அணிக்கு எதிரான முதல் தகுதிச்சுற்று போட்டியில் விளையாடியபோது…
அகமதாபாத் : மழை காரணமாக மும்பை பஞ்சாப் இடையேயான ஐபிஎல் குவாலிஃபயர் 2 போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த…
சென்னை : கமல் - சிம்பு உள்ளிட்டோர் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படத்தில் இடம்பெற்ற 'முத்த மழை' பாடல் யூடியூப்…
அகமதாபாத் : ஐபிஎல் குவாலிஃபயர் 2 சுற்றில் இன்று பஞ்சாப், மும்பை அணிகள் மோதுகின்றன. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
புதுச்சேரி : விசிக பொதுச்செயலாளர் துரை.ரவிக்குமாரின் மூத்த சகோதரர் கோ.க.நடேசன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் புதுச்சேரி…
சென்னை : மதுரையில் இன்று 48 ஆண்டுகளுக்கு பிறகு திமுக பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவரும்,…