2028 OLYMPICS [File Image]
2028ல் நடைபெற உள்ள ஒலிம்பிக்கில் புதிதாக கிரிக்கெட் உள்ளிட்ட 5 போட்டிகள் சேர்க்கப்பட உள்ளதாக லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் ஒருங்கிணைப்புக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, 2028ல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் நடைபெற உள்ள ஒலிம்பிக் தொடரில் புதிதாக கிரிக்கெட், ஸ்குவாஷ், சாப்ட்பால், ஃபிளாக் கால்பந்து, லாக்ரோஸ் ஆகிய 5 போட்டிகள் சேர்க்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2028ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த தொடரில் புதிதாக கிரிக்கெட் உள்ளிட்ட 5 போட்டிகளை சேர்க்க ஏற்பாட்டு குழு பல்வேறு கட்டங்களாக ஆலோசனை மேற்கொண்டு வந்தது. அந்தவகையில், மும்பையில் ஒலிம்பிக் தொடர் குறித்த ஆலோசனை கூட்டத்தில் புதிய போட்டிகளை சேர்ப்பது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, கடந்த 13ம் தேதி மும்பையில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி நிர்வாக குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
உற்சாகத்தில் ரசிகர்கள்! 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் உட்பட 5 போட்டிகள் சேர்ப்பு!
இந்த கூட்டத்தில் 2028ம் ஆண்டில் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ள ஒலிம்பிக் தொடரில் புதிதாக கிரிக்கெட் உள்ளிட்ட 5 போட்டிகளை சேர்க்க ஒலிம்பிக் ஏற்பாட்டு குழு பரிந்துரை செய்து ஒப்புதல் அளித்திருந்தது. கிரிக்கெட் போட்டியை தவிர, ஸ்குவாஷ், சாப்ட்பால், ஃபிளாக் கால்பந்து, லாக்ரோஸ் ஆகிய போட்டிகளையும் 2028ல் ஒலிம்பிக்கில் சேர்க்க பரிந்துரைக்கப்பட்டது. எனவே, மும்பையில் 141வது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூட்டம் அக்டோபர் 15 முதல் 17 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதனால், 2028 ஒலிம்பிக்கில் புதிதாக கிரிக்கெட் உள்ளிட்ட 5 போட்டிகளை சேர்க்கப்படுவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அந்தவகையில், 2028ல் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ள ஒலிம்பிக் தொடரில் புதிதாக கிரிக்கெட் உள்ளிட்ட 5 போட்டிகள் சேர்க்கப்பட உள்ளதாக ஒலிம்பிக் ஒருங்கிணைப்புக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
20 ஓவர் கிரிக்கெட்டிற்கு உலகளவில் வரவேற்பு கூடிய நிலையில், ஒலிம்பிக்கிலும் சேர்க்கப்பட்டுள்ளது. சர்வதேச விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக்கில் முதன் முறையாக கிரிக்கெட் விளையாட்டு சேர்க்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், உலக அளவில் இரண்டாவது பெரிய விளையாட்டான கிரிக்கெட்டை ஒலிம்பிக்கில் சேர்க்க 2 பேர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.…
விருதுநகர் : பட்டாசு ஆலையில் தீ விபத்து சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது தொடர் கதையாகி வருகின்றன. இன்றும் சிவகாசி அருகே…
லண்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் அக்கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ளும்…
சென்னை : இன்றும் நாளையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில்…