20 வயதுக்குட்பட்டோருக்கான உலக ஜூனியர் தடகளம் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி வெண்கலம் வென்றுள்ளது.
கென்யா தலைநகர் நைரோபியில் 20 வயதுக்குட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 4*400 மீ., கலப்பு தொடர் ஓட்ட தகுதிச்சுற்றில் இந்தியாவின் கபில், பிரியா மோகன், சம்மி, ஸ்ரீதர் அடங்கிய அணி 3 நிமிடம் 23.36 வினாடி நேரத்தில் ஓடி,ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் புதிய சாதனையை படைத்துள்ளனர்.இதற்கு முன் 3 நிமிடம், 26.64 வினாடியில் வந்ததே சாதனையாக இருந்தது.
ஆனால்,இதனையடுத்து நடைபெற்ற மற்றொரு தகுதிச்சுற்றில் நைஜீரிய அணி, 3:21.66 வினாடியில் வந்து புதிய சாதனை படைத்தது.இந்தியா இரண்டாவது இடம் பெற்றது.இதனைத் தொடர்ந்து,இறுதி போட்டியில் 3 நிமிடம், 20.57 வினாடி நேரத்தில் ஓடி மூன்றாம் இடத்தை பிடித்து,இந்திய அணி வெண்கலப் பதக்கத்தை வென்றது.இப்போட்டிகளில் இந்தியா வென்ற முதல் பதக்கம் இதுவாகும்.
முன்னதாக, இந்தியா சார்பில் பங்கேற்ற சீமா அன்டில் (வட்டு எறிதல், 2002), நவ்ஜீத் கவுர் (வட்டு எறிதல், 2014), ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதல், 2016), ஹிமா தாஸ் (400 மீ., ஓட்டம், 2018) இப்போட்டிகளில் பதக்கம் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…