ஒலிம்பிக் ஹாக்கி:ஜப்பானை வீழ்த்தி கெத்து காட்டிய இந்திய ஆண்கள் ஹாக்கி அணி…!

Published by
Edison

ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இன்று ஜப்பானை 5-3 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய ஆண்கள் ஹாக்கி அணி வெற்றி பெற்றுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 25 ஆம் தேதி நடைபெற்ற ஆண்கள் ஹாக்கி போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்திய அணியும், நியூசிலாந்து அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

தோல்வி:

இதனைத் தொடர்ந்து,26 ஆம் தேதி நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாம் நாள் லீக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி கோல் ஏதும் அடிக்கவில்லை.இதனால்,1-7 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலிய ஹாக்கி அணி வெற்றி பெற்றது.

தொடர் வெற்றி:

இருப்பினும்,கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற 3 ஆவது லீக் போட்டியில் இந்திய ஆண்கள் அணி,ஸ்பெயின் அணியை எதிர்கொண்டு,3-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது.

ஒலிம்பிக் சாம்பியன்:

இதனைத் தொடர்ந்து,நேற்று நடைபெற்ற இந்தியாவின் ஆண்கள் ஹாக்கி அணி, பூல் ஏ போட்டியில் நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான அர்ஜென்டினாவை 3-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறியது. மேலும்,குருப் ஏ பிரிவு பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

மீண்டும் வெற்றி:

இந்நிலையில்,இன்னும் சில நல்ல செய்திகள் என்னவென்றால்,இன்று நடைபெற்ற ஆண்கள் ஹாக்கி போட்டியில்,ஜப்பான் அணியை,இந்தியா எதிர்கொண்டது.

முதல் ஆட்டத்தில் 13 வது நிமிடத்தில் இந்திய அணியின் ஹர்மன்பிரீத் சிங் கோல் அடிக்க இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.இரண்டாவது ஆட்டத்தில் 17 வது நிமிடத்தில் குர்ஜந்த் சிங் ஒரு கோல் அடித்தார்.இதனால் ,இரண்டாவது பாதியில் 2-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகித்தது.

இவ்வாறு தொடர்ந்து முன்னேறிய இந்திய அணியை சுதாரித்துக் கொண்ட ஜப்பான் அணி மூன்றாவது ஆட்டத்தில் இரண்டு கோல் அடித்தது.இதனால்,2 – 2 என்ற கணக்கில் அணிகள்  சமநிலையில் இருந்தன.

இதனையடுத்து,இந்தியாவின் ஷிம்ரன்ஜீத் சிங் கோல் அடிக்க 3-2 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகித்தது.இறுதியில் இந்திய அணி 5-3 என்ற கணக்கில் ஜப்பானை வீழ்த்தி வெற்றி பெற்று,காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.இதுவரை ஆண்கள் ஹாக்கியின் குருப் ஏ பிரிவில் 5 போட்டிகளில்,ஒரு தோல்வியை தழுவி, 4 இல் வெற்றி பெற்று கெத்து காட்டியுள்ளது.

Published by
Edison

Recent Posts

ஈரோடு இரட்டைக் கொலை வழக்கு : 4 பேர் கைது!

ஈரோடு : மாவட்டம், சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி உச்சிமேடு பகுதியில் நடந்த இரட்டைக் கொலை சம்பவம் பெரும் பரபரப்பை…

28 minutes ago

குஜராத் அணி அசத்தல் வெற்றி! குதூகலத்தில் பெங்களூர், பஞ்சாப்!

டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எந்த அணி கோப்பையை வெல்லப்போகிறது என்கிற எதிர்பார்ப்புகளும்…

42 minutes ago

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது – சசிகலா சாடல்!

சென்னை : அஇஅதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா நேற்று (மே 18, 2025) தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற…

2 hours ago

பருவமழை முன்னெச்சரிக்கை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம்!

சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில், அதற்கு முன்னேற்பாடாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

2 hours ago

இன்று இந்த 8 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்..அலர்ட் செய்த வானிலை மையம்!

தமிழக மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரள பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக…

3 hours ago

டெல்லியை பந்தாடி த்ரில் வெற்றி…முதல் அணியாக பிளே ஆஃப்க்கு தகுதி பெற்ற குஜராத்!

டெல்லி : அருண் ஜெய்ட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதியது.…

3 hours ago