10 நாள் தனிமைப்படுத்தல் உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகளை கடைபிடிக்க கூறியதால், இங்கிலாந்தில் நடைபெற இருந்த காமன்வெல்த் விளையாட்டில் இருந்து இந்திய ஹாக்கி அணி விலகியுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் அடுத்த ஆண்டு ஜூலை 28 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடைபெற உள்ள நிலையில், இந்த போட்டியில் இருந்து விலகிக் கொள்வதாக இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் ஹாக்கி அணிகள் தெரிவித்துள்ளது. வரும் 2024 ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டி தகுதி சுற்று ஆசிய விளையாட்டில் கவனம் செலுத்துவதற்காக ஹாக்கி வீரர்கள் அனைவரும் தடுப்பூசி எடுத்து கொண்டுள்ளனர்.
இருப்பினும் இந்திய அணியினர் இங்கிலாந்தில் விளையாட வரும் பொழுது கட்டாயம் 10 நாட்கள் தனிமைப்படுத்தலை கடைபிடிக்க வேண்டும் என்ற கடுமையான விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால், இந்த விளையாட்டில் இருந்து விலகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காமன்வெல்த் போட்டியில் இருந்து விலகும் முடிவை போட்டி அமைப்பாளர்களுக்கு முன்னமே தெரிவித்து விடுமாறும் ஹாக்கி இந்தியா அமைப்பு சார்பில் அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…