தென்னாபிரிக்கா மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 6 டி20 போட்டி கொண்ட தொடரிலும் , 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது. இதில் நேற்று முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. ஆப்பிரிக்கா 45.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 164 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக மரிசேன் காப் 54 ரன்கள் அடித்தார்.இந்திய அணி சார்பில் கோஸ்வாமி மூன்று விக்கெட் பறித்தார்.
பின்னர் 165 ரன்கள் இலக்கு களமிறங்கிய இந்திய அணி 44.1 ஓவரில் 165 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை கொடுத்து இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக பிரியா புனியா 75 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார்.
மேலும் பிரியா புனியா தனது முதல் ஒரு நாள் போட்டியில் 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றதால் அவருக்கு ஆட்டநாயகி விருது கொடுக்கப்பட்டது.இரண்டாவது போட்டி நாளை நடைபெற உள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…