ஐபிஎல் தொடருக்கான இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது.! விண்ணப்பம் கொடுக்காமல் 24 பேர் சேர்ப்பு .!

Default Image
  • அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் கலந்து கொள்ள 971 வீரர்கள் விண்ணப்பித்து இருந்தனர். 
  • அதில் 332 வீரர்கள் கொண்ட இறுதிப்பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்தபட்டியலில் 24 பேர் விண்ணப்பிக்கலாம் சேர்க்கப்பட்டு உள்ளனர் .

இந்தியாவில் ஆண்டுதோறும் ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது.ஐபிஎல் தொடருக்கான ஏலம் ஆண்டு தோறும் பெங்களூருவில் நடைபெற்று வந்தது. ஆனால் கடந்த ஆண்டு பெங்களூரில் நடைபெறாமல் ஜெய்ப்பூரில் நடைபெற்றது.

அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் கலந்து கொள்ளும் வீரர்களின் ஏலம்  டிசம்பர் 19-ம் தேதி கொல்கத்தாவில் நடைபெற உள்ளது.இந்த ஏலத்தில் கலந்து கொள்ள பல நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் விண்ணப்பித்தனர்.  இந்நிலையில் அடுத்த வருடம் நடைபெற உள்ள  ஐபிஎல் தொடரில் கலந்தது கொள்ள 971 வீரர்கள் விண்ணப்பித்து இருந்தனர்.அந்த வீரர்களில் இருந்து 332 வீரர்கள் கொண்ட இறுதிப்பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரில் கலந்தது கொள்ள விண்ணப்பிக்காத முஸ்பிகுர் ரஹீம் , கெஸ்ரிக் வில்லியம்ஸ் ரஹீம் உட்பட 24 பேர் இறுதி பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.அவர்கள் அனைவரும் அணிகளின் விருப்பத்தின் பேரில் இறுதிப்பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.

இந்த ஏலத்தில் மொத்தமாக 332 வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.அவர்களில் இருந்து வெறும் 73 வீரர்கள் மட்டுமே ஏலத்தில் எடுக்கவுள்ளார். இந்த பட்டியலில் 186 இந்தியர்கள் உள்ளனர். 73 பேரில் 29 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே ஏலத்தில் எடுக்கப்படுவர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்