பிரான்சுக்கு எதிரான இறுதிப்போட்டியில் மெஸ்ஸி அடித்த சர்ச்சை கோல் செல்லாது என பிரெஞ்சு ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
கத்தாரில் நடந்த ஃபிஃபா கால்பந்து உலககோப்பையின் இறுதிப்போட்டியில் 4-2 என்ற கோல் கணக்கில் டை பிரேக்கரில் நடந்த பெனால்டி முறையில் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்று மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
இந்த போட்டியில் அர்ஜென்டினா அணியின் 3-வது கோலாக மெஸ்ஸியின் இரண்டாவது கோல் சர்ச்சையில் சிக்கியுள்ளது. முதலில் அந்த கோல் ஆப்சைடு கோல் என கூறப்பட்டாலும் பிறகு அது கோலாக கணக்கில் கொள்ளப்பட்டது. ஆனால் தற்போது இந்த கோல் செல்லாது என பிரெஞ்சு ரசிகர்கள் கூறுகின்றனர்.
மெஸ்ஸி அந்த கோல் அடிக்கும்போது அர்ஜென்டினா அணியின் மாற்று வீரர்கள் பந்து எல்லைக்கோட்டை தொடும் முன்பே களத்தில் நுழைந்துள்ளனர். கால்பந்து விதிகளின்படி களத்தில் கூடுதல் வீரர்கள் காணப்பட்டால் அந்த கோல் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.
இதனால் பிரெஞ்சு ஆதரவாளர்கள் பலர் சமூக வலைத்தளத்தில் மெஸ்ஸியின் இந்த கோல் செல்லாது என கூறிவந்தனர். ஆனால் சர்வதேச கால்பந்து சம்மேளன வாரியம், இதனை தெளிவுபடுத்தியுள்ளது, மாற்று வீரர்கள் ஆட்டத்தில் எந்த விதத்திலும் குறுக்கீடு செய்யாததால் இந்த கோல் கணக்கிடப்பட்டது என்று கூறினர்.
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…