ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டி நாளை அதிகாலை 5.30 மணிக்கு தொடங்குகிறது.
நடப்பு ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நாளை அதிகாலை (இந்திய நேரப்படி) 5.30 மணிக்கு தொடங்குகிறது.மொத்தம் ரூ.405 கோடி பரிசுத்தொகை கொண்ட இந்த போட்டியானது,ஜன.30 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்த போட்டியில்,ஆடவர் ஒற்றையர் பிரிவில் ரஃபேல் நடால், அலெக்சாண்டர் ஸ்வெரவ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.ஆனால், இரண்டாவது முறையாக விசா ரத்து செய்யப்பட்டதால்,முன்னணி வீரரான நோவக் ஜோகோவிச் இந்த போட்டியில் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அதே சமயம,மகளிர் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியன் நவோமி ஒசாகா,ஆஸ்லி பார்ட்டி உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர்.
ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றால் ரூ.23.75 கோடியும்,இரண்டாவது இடம் பெறுபவருக்கு ரூ.11.75 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்படவுள்ளது.எனினும்,முதல் சுற்றில் வெற்றி பெறுபவருக்கு ரூ.40 லட்சம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…
டெல்லி : ஐபிஎல் 2025 தொடரில், அம்பயர்கள் வீரர்கள் களத்திற்கு வருவதற்கு முன்பு அவர்களுடைய பேட்டுகளை களத்தில் பரிசோதிக்கும் புதிய…
சென்னை : தமிழக பாஜகவின் 13-வது தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற இந்த பதவியேற்பு…
சென்னை : தமிழக அரசின் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மெனுவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சமூக நலன் மற்றும் மகளிர்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 245% வரை வரி விதிக்கப்படும் என…