கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இந்தியா, பங்களாதேஷ் அணிகளுக்கிடையே நேற்று பகலிரவு டெஸ்ட் போட்டி தொடங்கியது.இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணி முதல் இன்னிங்சில் 30.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 106 ரன்கள் எடுத்தனர்.
இந்திய அணி சார்பில் இஷாந்த் சர்மா 5 , உமேஷ் 3 , மற்றும் ஷமி 2 விக்கெட்டை வீழ்த்தினர். இதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்க்ஸை தொடங்கிய இந்திய அணி நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட்டை இழந்து 174 ரன்கள் எடுத்தனர்.
இன்று இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. இந்திய அணியில் ரஹானே , புஜாரா ஆகிய இருவரும் அரைசதம் அடித்தார். மேலும் அணியின் கேப்டன் கோலி நிதானமான ஆட்டத்தால் சதம் விளாசி 136 ரன்கள் குவித்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார்.
மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.இறுதியாக இந்திய அணி 9 விக்கெட்டை இழந்து 347 ரன்கள் எடுத்து இருந்தபோது இந்திய அணியின் கேப்டன் கோலி டிக்ளர் செய்தார். பங்களாதேஷ் அணியில் எபாதத் ,அல்-அமீன் ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்டை பறித்தனர்.
இதைத்தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கிய பங்களாதேஷ் அணி 4 விக்கெட்டை இழந்து 45 ரன்கள் எடுத்து உள்ளது.அதில் இஷாந்த் சர்மா 3 விக்கெட்டும் ,உமேஷ் யாதவ் 1 விக்கெட்டையும் வீழ்த்தி உள்ளனர்.
சென்னை : நேற்றைய விடுமுறை தினத்தை தொடர்ந்து இன்று காலை அவை தொடங்கியதும், கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பது குறித்த சட்ட…
டெல்லி : 2025ம் ஆண்டுக்கான பத்மபூஷன் விருதுகளை இன்று மாலை வழங்குகிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. டெல்லியில் உள்ள…
தெஹ்ரான்: ஈரானின் தெற்கு மாகாணமான ஹோர்மோஸ்கானில் உள்ள துறைமுகத்தில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40…
டெல்லி : நடப்பு ஐபிஎல் தொடரில் நெற்றிரவு நடைபெற்ற போட்டியில் பெங்களூர் மற்றும் டெல்லி அணிகள் மோதியது. இதற்கான டாஸில்…
சென்னை : முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…