இங்கிலாந்து அணி நியூஸிலாந்தில் சுற்று பயணம் செய்து தற்போது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது.கடந்த 21-ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது.முதலில் இறங்கிய இங்கிலாந்து அணி 353 ரன்னிற்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
நியூஸிலாந்து அணியில் டிம் சவுதி 4 , நீல் வாக்னர் 3 விக்கெட்டையும் பறித்தனர்.இதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்க்ஸை தொடங்கியது.நேற்றைய மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் நியூஸிலாந்து அணி 394 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டை பறிகொடுத்து இருந்தது.
களத்தில் வாட்லிங் 119 , சன்ட்னர் 31 ரன்களுடன் இருந்தனர்.இதை தொடர்ந்து இன்று நான்காம் நாள் ஆட்டத்தை தொடங்கிய நியூஸிலாந்து அணி சிறப்பாக விளையாடி சன்ட்னர் சதம் அடித்து 126 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
பின்னர் நிலைத்து நின்று விளையாடிய வாட்லிங் இரட்டை சதம் அடித்து 205 ரன்னில் வெளியேறினார்.இறுதியாக நியூஸிலாந்து அணி 9 விக்கெட்டை இழந்து 615 ரன்கள் எடுத்து இருந்த போது டிக்ளர் செய்தனர்.இதனால் நியூஸிலாந்து அணி 262 ரன்கள் முன்னிலையில் இருந்தது.வாட்லிங் , சன்ட்னர் இருவரின் கூட்டணியில் 250 ரன்கள் குவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…