ஸ்வீடனில் நடந்த ஐரோப்பிய யோகா விளையாட்டு சாம்பியன்ஷிப்பில், தென்கிழக்கு இங்கிலாந்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி யோகா வீராங்கனை ஒருவர் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். கடந்த வார இறுதியில் மல்மோவில் ஐரோப்பிய யோகாப் போட்டி நடைபெற்றது.
ஸ்வீடிஷ் யோகா விளையாட்டு கூட்டமைப்புடன் இணைந்து சர்வதேச யோகா விளையாட்டு கூட்டமைப்பு ஏற்பாடு செய்த இந்த யோகாப் போட்டியில், 12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பிரிவில் 13 வயதான ஈஸ்வர் ஷர்மா என்ற வீராங்கனை கலந்து கொண்டார்.
அந்த போட்டியில் ஈஸ்வர் ஷர்மா தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். கென்ட்டில் உள்ள செவெனோக்ஸைச் சேர்ந்த ஈஸ்வர் ஷர்மா, தனக்கு மூன்று வயதாக இருந்தபோதே தனது தந்தையைப் பின்பற்றி யோகா செய்யத் தொடங்கியுள்ளார். இதனால் பல உலக யோகா சாம்பியன்ஷிப்களை வென்றுள்ளார்.
இதுவரை ஐந்து உலக சாம்பியன்ஷிப் பட்டங்களையும், யோகாவில் அவர் செய்த பங்களிப்பிற்காக ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸில் பிரிட்டிஷ் குடிமகன் இளைஞர் விருதையும் வென்றுள்ளார். தனது தந்தையுடன் இணைந்து, யோகா மற்றும் அதன் பல நன்மைகளை இங்கிலாந்தில் பரப்புவதற்காக ஐயோகா சொல்யூஷன்ஸ் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
அதோடு மன இறுக்கம் மற்றும் ஹைபராக்டிவிட்டி கோளாறு உள்ள குழந்தைகளுக்கு யோகாவின் செய்தியைப் பரப்புவதில் ஆர்வம் கொண்ட ஈஸ்வர் ஷர்மா, 14 நாடுகளில் 40 குழந்தைகளுக்கு தினசரி யோகா வகுப்புகளை வழிநடத்தினார். இதனால் அப்போதைய பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சனால் பாயிண்ட்ஸ் ஆஃப் லைட் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று…
இந்தியா : அம்பானிக்குச் சொந்தமான ஜியோ நிறுவனம் தங்களுடைய சிம்களில் புதிய ரீசார்ஜ் திட்டங்களை கொண்டு வந்து பயனர்களைக் கவர்ந்து…
டெல்லி : அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலத்தில் அணி நிர்வாகம் வீரர்களை மாற்ற முடிவெடுத்ததை போல…
அசாம் : கடந்த வருடம் ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து எங்கு…
அமெரிக்கா : இன்னும் இரண்டு வாரங்களில் அமெரிக்காவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் மற்றும் கமலா…