நார்வே செஸ் : கார்ல்சனை வீழ்த்தினார் தமிழக வீரர் பிரக்ஞானந்தா !

Published by
அகில் R

பிரக்ஞானந்தா : தமிழக வீரரான பிரக்ஞானந்தா கிளாசிக்கல் (Classical) முறையில், மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி இருக்கிறார்.

இந்த ஆண்டின் நார்வே செஸ் தொடரானது நார்வே நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் உலகின் நம்பர் 1 செஸ் வீரரான மேக்னஸ் கார்ல்சன், தமிழக இளம் வீரர் பிரக்ஞானந்தா, நடப்பு உலக செஸ் சாம்பியனான டிங் லிரின் உட்பட  6 பேர் கலந்து கொண்டு இந்த நார்வே செஸ் தொடரில் விளையாடி வருகின்றனர்.

இந்த ஒவ்வொரு சுற்றிலும் ஒரு வீரர் இரண்டு முறை மோத வேண்டும். இதில் முதல் சுற்றில் ஃபிரோஸ்ஜா அலிரேசாவுடன் விளையாடிய பிரக்ஞானந்தா அதில் வெற்றி பெற்றார். அதன் பிறகு 2-வது சுற்றில் நடப்பு உலக செஸ் சாம்பியனான டிங் லிரினுடன் மோதிய பிரக்ஞானந்தா தோல்வி கண்டிருந்தார்.

இந்நிலையில், இந்த தொடரின் 3-வது சுற்றில் பிரக்ஞானந்தா, உலகின் தலை சிறந்த வீரரான கார்ல்சனை எதிர்கொண்டு விளையாடினார். கிளாசிக்கல் முறையில் நடக்கும் இந்த செஸ் போட்டியில் வெள்ளை காய்களை வைத்து பிரக்ஞானந்தா விளையாடினார்.

இவர் தொடக்கத்திலிருந்தே கார்லசனுக்கு ஈடு கொடுத்து விளையாடி போட்டியின் முடிவில் கார்ல்சனை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் தமிழக வீரரான பிரக்ஞானந்தா 5.5 புள்ளிகளை பெற்று முதலிடத்திற்கு முன்னேறி உள்ளார். இந்த வெற்றியின் மூலம் க்ளாசிக்கல் முறையில் முதல் முறையாக பிரக்ஞானந்தா, கார்ல்சனை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
அகில் R

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

7 hours ago
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

8 hours ago
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

8 hours ago
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

9 hours ago
பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

10 hours ago
பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்! பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்! 

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

11 hours ago