திறமை ஒருபோதும் போதாது, நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும் என்று நூற்றாண்டின் வீரர் என்ற விருதை பெற்றபின் ரொனால்டோ பேச்சு.
நேற்று துபாயில் நடந்த குளோப் சாக்கர் விருதுகளில் ஜுவென்டஸ் மற்றும் போர்ச்சுகல் சூப்பர்ஸ்டார் கிறிஸ்டியானோ ரொனால்டோக்கு “பிளேயர் ஆஃப் தி செஞ்சுரி” விருது வழங்கப்பட்டது. 2001 முதல் 2020 வரை உலகின் சிறந்த கால்பந்து வீரர்களில் கிறிஸ்டியானோ ரொனால்டோக்கு இந்த பரிசு வழங்கப்பட்டது.
விருதைப் பெற்றபின் பேசிய ரொனால்டோ, தனக்கு 40 வயதாகும் வரை முதலிடத்தில் இருக்க விரும்புகிறேன் என்றும் திறமை ஒருபோதும் போதாது, நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். அப்போதுதான் உங்கள் கைகள் உயரும் என்று தெரிவித்தார். கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது பாராட்டுக்களை, விருதையும் பெற்று பார்வையாளர்களுக்கு முன்னால் மகிழ்ச்சியடைந்தார்.
பின்னர் அவரின் தியாகத்தை பற்றியும் பேசியுள்ளார். விளையாட்டிற்காக தியாகம் செய்ய வேண்டும் என்றும் அப்போதுதான் விளையாட்டின் உச்சியில் இருக்க முடியும் எனவும் குறிப்பிட்டார். அவர் ஆரோக்கியமாக இருப்பதற்கான நீண்ட நேர தூக்கத்திற்கு பதிலாக ஐந்து 90 நிமிட தூக்கத்தை எடுத்துக்கொள்வதாக தெரிவித்தார். விளையாட்டுகளுக்குப் பிறகு அதிகாலை 2 மணிக்கு அவர் எப்போதும் மசாஜ் பெறுவார் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…
சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிறப்பு…
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி விட்டது என்றாலே அந்த நிகழ்ச்சி பற்றிய விஷயங்கள் தினம் தினம் தலைப்பு…
சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் "இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா" மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று…
சேலம் : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற…
சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…