ஐ.சி.சி மகளிர் டி20 உலகக் கோப்பை 2020 தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொண்டு உள்ளனர்.இன்று நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச முடிவு செய்தது.
முதலில் இறங்கிய இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக ஷைபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா இருவரும் இறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே ஸ்மிருதி மந்தனா 10 ரன்னில் வெளியேறினார். பின்னர் ஹர்மன்பிரீத் கவுர் இறங்கினர். சிறப்பாக விளையாடிய ஷைபாலி வர்மா 29 ரன்களுடன் வெளியேற பின்னர் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 2 , ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார்.
இதையெடுத்து இறங்கிய தீப்தி சர்மா சிறப்பாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார்.அரைசதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 49 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.இறுதியாக இந்திய அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 132 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணியில் ஜெஸ் ஜோனாசென் 2 விக்கெட்டை பறித்தார்.
133 ரன்கள் இலக்குடன் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீராங்கனைகளாக அலிஸா ஹீலி ,பெத் மூனி இறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே இருந்து அலிஸா ஹீலி அதிரடியாக விளையாடி வந்தார்.ஆனால் எதிர்முனையில் இருந்த பெத் மூனி 6 ரன்னில் வெளியேறினர்.
பின்னர் இறங்கிய கேப்டன் மெக் லானிங் (5) ,ரேச்சல் ஹெய்ன்ஸ் (6) ரன்னில் விக்கெட்டை இழந்தனர். அதிரடியாக விளையாடிய அலிஸா ஹீலி அரைசதம் அடித்து 51 ரன் எடுத்தார். பிறகு மத்தியில் இறங்கிய ஆஷ்லீ கார்ட்னர் மட்டும் 34 ரன்கள் அடித்தார். மற்ற வீராங்கனைகள் அனைவரும் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியாக ஆஸ்திரேலிய அணி 19.5 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 115 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.இதனால் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்திய அணி சார்பில் பூனம் யாதவ் 4 ,ஷிகா பாண்டே 3 விக்கெட்டை பறித்தனர்.
பிரிஸ்டல் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த ஒரு நாள் தொடரின் கடைசி போட்டி இன்று…
சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த…
சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…
மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…