கொரோனா வைரஸ் காரணமாக ஹோட்டல் தொடங்க மாநில அரசுகள் நிபந்தனையுடன் அனுமதி அளித்து வருகிறது. இருப்பினும், விதிகளை மீறி சில இடங்களில் இரவு வரை ஹோட்டல்கள் திறந்து வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மும்பை விமான நிலையத்திற்கு அருகிலுள்ள டிராகன் ஃப்ளை கிளப்பில் அதிகாலை 3 மணியளவில் மும்பை காவல்துறையினர் சோதனை நடத்தினர்.
அப்போது, மும்பை காவல்துறை நடத்திய சோதனையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, பாடகர் குரு ரந்தாவா ஆகியோர் அந்த கிளப்பில் நடந்த மீட்டிங்கில் கலந்து கொண்டு இருந்தனர். இந்நிலையில், கொரோனா விதிகளை மீறி செயல்பட்டதாகவும், கூட்டமாக கூடியதாகவும், இரவில் நீண்ட நேரம் கிளப்பில் இருந்ததாக கூறி சுரேஷ் ரெய்னா கைது செய்யப்பட்டார்.
பின்னர், கைது செய்யப்பட்ட ரெய்னா பெயிலில் விடுவிக்கப்பட்டார். இதில் 27 ஊழியர்களும் கைது செய்யப்பட்டனர். கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதாக இந்த சோதனை நடத்தப்பட்டதாக மும்பை காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…