கொரோனா வைரஸ் காரணமாக ஹோட்டல் தொடங்க மாநில அரசுகள் நிபந்தனையுடன் அனுமதி அளித்து வருகிறது. இருப்பினும், விதிகளை மீறி சில இடங்களில் இரவு வரை ஹோட்டல்கள் திறந்து வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மும்பை விமான நிலையத்திற்கு அருகிலுள்ள டிராகன் ஃப்ளை கிளப்பில் அதிகாலை 3 மணியளவில் மும்பை காவல்துறையினர் சோதனை நடத்தினர்.
அப்போது, மும்பை காவல்துறை நடத்திய சோதனையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, பாடகர் குரு ரந்தாவா ஆகியோர் அந்த கிளப்பில் நடந்த மீட்டிங்கில் கலந்து கொண்டு இருந்தனர். இந்நிலையில், கொரோனா விதிகளை மீறி செயல்பட்டதாகவும், கூட்டமாக கூடியதாகவும், இரவில் நீண்ட நேரம் கிளப்பில் இருந்ததாக கூறி சுரேஷ் ரெய்னா கைது செய்யப்பட்டார்.
பின்னர், கைது செய்யப்பட்ட ரெய்னா பெயிலில் விடுவிக்கப்பட்டார். இதில் 27 ஊழியர்களும் கைது செய்யப்பட்டனர். கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதாக இந்த சோதனை நடத்தப்பட்டதாக மும்பை காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…