லக்னோ அணிக்கு ஆலோசகராக சுரேஷ் ரெய்னா நியமனம்..?

Suresh Raina

2024 ம் ஆண்டின் ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் ஆலோசகராக முன்னாள் இந்திய அணி வீரர் சுரேஷ் ரெய்னா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன் புதிதாக உருவாக்கப்பட்ட லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் அணியின் ஆலோசகராக செயல்பட்டு வந்தவர் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் தற்போது கொல்கத்தா அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

கடந்த ஆண்டு லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கு ஆலோசகராக செயல்பட்ட கௌதம் கம்பீர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு திரும்பியுள்ளதால் லக்னோ அணி நிர்வாகம் சுரேஷ் ரெய்னாவை நியமித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐபிஎல் தொடரில் மிஸ்டர் ஐபிஎல் என்று அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா, ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் லயன்ஸ் அணிகளுக்காக விளையாடியுள்ளார்.

209 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய சுரேஷ் ரெய்னா ஒரு சதம், 39 அரைசதங்கள் உட்பட 5528 ரன்கள் விளாசி உள்ளார். மேலும், 203 சிக்ஸர்கள் மற்றும் 25 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.  கடந்த ஐபிஎல் போட்டிகளில் சுரேஷ் ரெய்னா வர்ணனையாளரகவும் செய்யப்பட்டார். ரெய்னாவை “சின்ன தல”என சிஎஸ்கே ரசிகர்கள் அழைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்