ஆக்ரோஷமா விளையாடாதீங்க! சுப்மன் கில்லுக்கு அட்வைஸ் செய்த சுனில் கவாஸ்கர்!

Published by
பால முருகன்

இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில்லின் டெஸ்ட் போட்டியின் பார்ம் சற்று குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால், கடைசியாக கடந்த ஆண்டு இறுதியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சுப்மன் கில் முதல் இன்னிங்ஸில் 2 ரன், அடுத்த இன்னிங்ஸில் 26 ரன்கள் என குறைவான ரன்களை எடுத்தார்.

ஆனால், இந்த டெஸ்ட் தொடருக்கு முன்பு கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஆஸ்ரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற  4-வது டெஸ்ட் போட்டியில் 128 ரன்கள் எடுத்தார். அந்த போட்டிக்கு பிறகு டெஸ்ட் போட்டிகளில் சுப்மன் கில் பேட்டிங் பெரிய அளவில்  தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் சுப்மன் கில் ஆக்ரோஷமான பாணியில் விளையாடுவதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் பேட்டி ஒன்றில் விமர்சித்து பேசியுள்ளார்.  இது குறித்து பேசிய சுனில் கவாஸ்கர் ” டெஸ்ட் கிரிக்கெட்டில் சுப்மன் கில் சற்று ஆக்ரோஷமாக விளையாடுகிறார் என்று நான் நினைக்கிறேன்.

ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த டேவிட் வார்னர்..!

நீங்கள் புரிந்துகொள்ளவேண்டிய விஷயம் என்னவென்றால், டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும்போது இவை அனைத்திற்கும் வித்தியாசம் உள்ளது. குறிப்பாக அந்த வித்தியாசம் பந்தில் உள்ளது. ஏனென்றால், டெஸ்ட் போட்டியில் இருக்கும் சிவப்பு பந்து டி20, ஒரு நாள் போட்டிகளில் விளையாடும் வெள்ளை பந்தை விட வேகமாக செல்லும். டெஸ்ட் போட்டியில் நாம் பேட்டை வைத்து மெதுவாக தட்டினால் கூட பந்துவேகமாக சென்றுவிடும் . அந்த நேரத்தில் நாம் இன்னும் வேகமாக அடிக்க சென்றால் அது சரியாக இருக்காது. நிதானமாக விளையாடவேண்டும்.

இந்த விஷயத்தை சுப்மன் கில் தெரிந்துகொள்ளவேண்டும். சுப்மன் கில் தனது கிரிக்கெட் வாழ்க்கையை மிகவும் சிறப்பாக தொடங்கினார், ஆரம்பத்தில் எல்லாம் அவருடைய பேட்டிங் என்னை மட்டுமின்றி பலரையும் கவர்ந்தது. நான் உட்பட பலரும் அவரது ஷாட்களைப் பாராட்டினோம். அவர் மீண்டும் தனது ஃபார்மிற்கு வருவார் என்று நாங்கள் நம்புகிறோம்” எனவும் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மேலும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த நிலையில், அடுத்ததாக இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் ஜனவரி 3-ஆம் தேதி ஜோகன்னஸ்பர்க் வாண்டரர்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

LSG vs PBKS : சொந்த மண்ணில் வீழ்ந்தது லக்னோ! 17வது ஓவரில் பஞ்சாப் அசத்தல் வெற்றி!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…

1 hour ago

LSG vs PBKS : தட்டுத்தடுமாறி டார்கெட் வைத்த லக்னோ! பஞ்சாப் ஜெயிக்க 172 ரன்கள் தேவை.!

லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…

3 hours ago

LSG vs PBKS : லக்னோவுக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு!

லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…

5 hours ago

வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…

சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…

5 hours ago

“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!

லக்னோ :  தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…

6 hours ago

வழக்கு தொடர்ந்த பாஜக நிர்வாகி.. ‘எம்புரான்’ படத்திற்கு தடை விதிக்க கேரள உயர்நீதிமன்றம் மறுப்பு.!

கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…

6 hours ago